tag:blogger.com,1999:blog-68315524458852711242024-03-08T13:59:52.668+05:30ஆண்டவன் அனுபூதிசமூகம், அரசியல், ஆன்மீகம் இவை பற்றிய தனி மனித தாக்குதல் இல்லாத விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் இவற்றில் தேவையான மாற்றம் குறித்த எனது பிரார்த்தனைகள்Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-80572709633761587402012-08-22T16:42:00.002+05:302012-08-22T16:42:50.162+05:30வீடு வாங்கப் போனேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சென்னைக்கு வந்ததும் ஒரு வீடு (அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான்) வாங்கலாம் என முடிவு செய்து கடந்த 5 மாதங்களாக தேடி வருகிறேன். அடேங்கப்பா.. எத்தனை விதமான பிரச்சினைகள்.. எத்தனை விதமான அனுபவங்கள்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில், இனி சென்னையில் சாமானியன் வீடோ அடுக்கு மாடி குடியிருப்போ வாங்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு 800 சதுர அடி வீடு வாங்க கூட ஒரு நடுத்தர வர்க்கத்தவரால் முடியாமல் போயிற்று. குறைந்த பட்சம் ரூ 20 லட்சம். இது ஊருக்கு மிக தொலைவில் ஏதோ ஒரு குடியிருப்பில் தினமும் ஒரு 3 அல்லது 4 மணி நேரம் அலுவலகத்துக்கு பயணம் செய்ய தயாராக இருந்தால். மேலும் சொந்த வாகனம் இல்லாவிட்டால் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் பல இடங்களில் வீடு தேடியபோது கவனித்த மிக முக்கிய விசயம். யாருமே குடியிருப்பதற்கு வீடு கட்டுவதுபோல தெரியவில்லை. பெரும்பாலும் எல்லோருமே ஒரு முதலீடாக வீடு வாங்குபவர்களுக்காகவே கட்டுகிறார்கள். என்னைப்போல குடியிருக்க வீடு வாங்குபவர்கள் தனியாகதான் அதில் குடியிருக்க வேண்டி இருக்கும். (மற்றவர்கள் வாடகைக்கு வரும்வரை)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வாரம் ஒரு பத்திரிக்கையில் ஒருவர் எழுதி இருந்தார்.சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் மாடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் விலை குறையும் என்று. இது முற்றிலும் தவறான கணிப்பு. நான் தேடியவரை மாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வீடுகளின் விலையும் அதிகரித்தே இருக்கிறது. 4 அல்லது 5 மாடிகளுக்கு மேல் ஒவ்வொரு மாடிக்கும் குறைந்தது ரூ 50 முதல் ரூ 500 வரை விலை உயர்த்தியே விற்கிறார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
இன்னொரு முக்கியமான பிரச்சினை அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் வீடுகள் கட்டுவது, அரசிடம் அனுமதி வாங்கியதை விட அதிக சதுர அடிகளில் வீடுகளைக் கட்டுவது, அனுமதியே வாங்காமல் அனுமதி வாங்கியதுபோல கட்டுவது, இன்னும் இந்த அரசு அனுமதி விசயத்தில் எவ்வளவு தகிடு தத்தம் இருக்கோ தெரியவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் பார்த்தவரை இதுவரை யாருமே அரசு அனுமதி அளித்த வரைபடம் படி வீடு கட்டவில்லை. ஓரளவுக்கு அந்த வரைபடத்தை ஒட்டி வீடு கட்டப்படுமானால் அந்த பில்டர் கேட்கும் பணத்துக்கு நாம் இரண்டு வீடு வாங்கி விடமுடியும். அவ்வளவுக்கு கொள்ளை விலை வைத்து விற்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />எனக்குத் தெரிந்த வக்கீல் நணபரிடம் இது பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன தகவல்கள் இன்னும் பகீரென்று இருந்தது. 1999க்குப் பிறகு கட்டப்பட்ட விதி முறை மீறிய கட்டிடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருப்பதாக கேட்டது வயிற்றில் புளியைக் கரைக்கிறது. நமது அரசுகள்தான் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தள்ளிவைத்துவிட்டு மேலும் மேலும் இப்படி விதிமுறை மீறிய குடியிருப்புகளை அனுமதிப்பது வருத்தமாகவே இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தி நகரில் இருக்கும் வணிக வளாகங்கள் விதிப்படி கட்டப்படவில்லை என குதிக்கும் நமக்கு, நாம் குடியிருக்கும் வீடுகளே விதிப்படி கட்டப்படவில்லை என்பது எப்போது உறைக்கும் என தெரியவில்லை. இதில் எல்லோரும் கூட்டுக்களவாணிகள் போலத்தான் தெரிகிறது. </div>
<br />
<div style="text-align: justify;">
சுருக்கமாக சொன்னால் பேசாமல் வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாம் போல தோன்றுகிறது. யாராவது பூனைக்கு மணி கட்டுவதுபோல், ஏதாவது ஒரு அரசாங்கம் விதிகளைத் தளர்த்தியோ அல்லது புதிய விதிகளை கடுமையாக பின்பற்ற ஆவன செய்தாலோ அல்லது அத்தி பூத்தாற்போல் யாராவது நியாயமான உணர்வுடைய ஒரு பில்டர் அமைந்தாலோ தான் வீடு வாங்க முடியும்போல தெரிகிறது.<br /><br />இல்லாவிட்டால் எல்லாருக்கும் விதிச்சது நமக்கும் அப்பிடின்னு முடிவு பண்ணி ஏதாவது ஒரு பில்டர்கிட்ட வீடு வாங்கிவிடலாமான்னும் ஒரு யோசனை இருக்கு..</div>
<div style="text-align: justify;">
<br /> </div>
<div style="text-align: justify;">
காலமும் நம்ம மஹாலிங்கமும் தான் இதுக்கு பதில் சொல்லணும். ஓம் சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.</div>
</div>
<div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-56527283479210897142012-03-16T11:16:00.000+05:302012-03-16T11:16:45.300+05:30இலங்கை போர்க் குற்றங்கள்.. யார் பொறுப்பு??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நேற்று சானல்4 ஒளிபரப்பிய அந்த இலங்கை போர்க் குற்ற வீடியோவைப் பார்த்த பிறகு நெஞ்சு அடைத்ததுபோல இருந்தது. முதல் பாகம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இதை சற்று விட்டு விட்டுத்தான் பார்க்க முடிந்தது. கண்கள் பனித்தது. இதற்கு யார் பொறுப்பு என அந்த விடியோவில் காட்டினார்கள். எனக்கு அவர்கள் காட்டியவர்களுடன் இன்னும் அதிக பொறுப்புடையவர்களாக சிலர் தெரிந்தார்கள். அவர்கள் பற்றி..<br />
<br />
</div><div style="text-align: justify;">இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதுபற்றி தெரிந்தும் முழுமையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடாமல், நடிகைகளின் அங்கங்களையும், சினிமா/அரசியல் கிசுகிசுகளையும் பக்கத்துக்கு பக்கம் பதிப்பிற்று விற்றுக் கொண்டிருந்த நம் தமிழகத்துப் பத்திரிக்கைகள் / இதர ஊடகங்கள். <br />
<br />
இன்னும்கூட இதில் கள்ளமௌனம் சாதிக்கும் நம் ஊடகங்கள்தான் முதல் குற்றவாளி.<br />
<br />
</div><div style="text-align: justify;">இதே நேரத்தில், அரசியல் பதவி பேரம் பேசிக்கொண்டும், வாரிசுச்சண்டையில் சமாதானம் பேசிக் கொண்டும், சொகுசு பங்களாக்களில் நிரந்தர ஓய்வு எடுத்துக்கொண்டும் இருந்த நம் தமிழக முன்னணி அரசியல் தலைவர்கள் இரண்டாவது குற்றவாளி.<br />
<br />
இவர்களுக்கும் இதுபற்றி நன்றாக தகவல்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களை திசை திருப்பி இலங்கை அரசாங்கம் சொன்ன பொய்களை நம்மை நம்பவைத்த நயவஞ்சகர்கள். இன்று இதற்காக இவர்கள் சிந்தும் நீலிக் கண்ணீர் அவர்கள் குடும்பததை எரியாய் எரிக்கப் போகும் நெருப்புத் துண்டங்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.<br />
<br />
</div><div style="text-align: justify;">இந்த இறுதிப் போரில் இலங்கைக்கு தார்மீக உதவிகளும், தளவாட உதவிகளும் செய்து போரை முடித்துவைக்க உதவியதாக சொல்லப்படும் நம் இந்திய மத்திய அரசாங்கம் இதில் மூன்றாவது குற்றவாளி. <br />
<br />
நம் தமிழகத்தை முதலிலேயே நீர் மேலாண்மையில் வஞ்சித்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, ராஜீவ் கொலைக்குப் பிறகு முற்றிலும் கைகழுவி விட்டது. இன்னும் நம் வங்கக் கடலில் தினமும் தாக்கப்படும் / கொல்லப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லாத இந்த மத்திய அரசு, இப்போது ஒவ்வொரு தமிழனும் இனி இந்தியன் என சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வைத்துவிட்டது.<br />
<br />
</div><div style="text-align: justify;">இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதைத் தடுக்கத் தவறிய ஐநா சபையும் அதன் உறுப்பு நாடுகளும் நான்காவது குற்றவாளிகள். <br />
<br />
லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த ஒரு சமூகமே அழிக்கப்பட்டதை இவர்கள் தத்தமது சாட்டிலைட்டுகள் வழியாக அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இன்று படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கக்கேடு. உண்மையில் நம் கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்வதுபோல ஐநா சபை என்பது அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஏவலை செய்து முடிக்கும் நாய்தான் போலிருக்கிறது.<br />
<br />
</div><div style="text-align: justify;">இந்த போர்க்குற்றங்கள் நடந்ததை அறிந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் / செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும், நான் உட்பட, ஐந்தாவது குற்றவாளிகள்.<br />
<br />
இன்னும் நம்மால் சாந்தமான மனநிலையில் வாழ முடிகிறது. ஒன்று நாம் முற்றிலும் காயடிக்கப்பட்டிருக்கிறோம், அல்லது முழு ஞானியாகி விட்டோம். இதில் முன்னதுதான் சரியானது என நினைக்கிறேன்.<br />
<br />
<br />
ஒரு குற்றத்தை செய்பவனுடன் உடந்தையாக இருந்தவர்களும் பெரிய குற்றவாளிதான். இந்த வகையில் மேற்கண்ட அனைவருமே குற்றவாளிகளே. <br />
<br />
<br />
கடவுளே மஹாலிங்கம், இந்த படுகொலையில் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நற்கதியைக் கொடுங்க. இன்னும் பிழைத்து இருப்பவர்களுக்கு எதையும் தாங்கும் மனோபலத்தையும் ஆத்ம பலத்தையும் கொடுங்க. என்னைப் போன்ற தமிழனுக்கு கொஞ்சமாவது வீரத்தைக் கொடுங்க..<br />
<br />
சதுரகிரி சுந்தரனே சரணம்...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-49159748114053907252012-03-02T12:53:00.000+05:302012-03-02T12:53:36.106+05:30பயமாக இருக்கிறது....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நேற்று என் மகன் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு சொன்னான். என்னடான்னு கேட்டா அவன் வகுப்பில் கூட படிக்கும் ஒரு பையன் சக மாணவியை லவ் பண்ணுவதாக சொன்னான். <br />
<br />
சற்று பகீரென்று இருந்தது. சமாளித்துக் கொண்டு இது எப்பிடி உனக்கு தெரியும்னு கேட்டேன். அந்த பையனே அவனிடன் சொன்னதாக சொன்னான். பிறகு அவனிடம் அந்த பையன் ஒரு பேட்பாய் (Bad Boy) , அவனோட சேராதேன்னு சொல்லி சமாளிச்சு டாபிக்க மாத்தினேன்.<br />
<br />
இதில் முக்கியமான விசயம் என் பையன் வயது 5, படிப்பது ஒன்னாவது வகுப்பில்.<br />
<br />
இந்த வயதில் இந்த குழந்தைகளுக்கு லவ் பண்ணுவது பற்றி தெரிவதும் அதை நடைமுறைப்படுத்த இறங்குவதும் ஒரு பெற்றோராக பயமாக இருக்கிறது. <br />
<br />
பிரச்சினை பள்ளிகளில் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளிலும், நாம் பார்க்கும் டிவி சீரியல்களிலும், பார்க்கும் சினிமாக்களிலும்தான் முக்கியமான பிரச்சினை இருக்கிறது. <br />
<br />
பெரியவர்கள் பார்க்கும் அதே சீரியலையும், சினிமாவையும்தான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அதை அவர்கள் பக்குவத்துக்கு ஏற்ப புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த இறங்கி விடுகிறார்கள்.<br />
<br />
இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்தவுடன் எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.<br />
<br />
என்ன செய்றதுன்னு தெரியல. நம்மாலயும் வீட்டுல டீவி பார்க்காம இருக்க முடியாது. இனிமேல் அந்த பசங்க பார்க்கர படங்களாகவே புரோகிராம்களாகவே நாமளும் பார்க்க பழகிக்கணும்னு நினைக்கிறேன்.<br />
<br />
எல்லாம் அவன் செயல்.. இயற்கை ஏதோ சமூக மாற்றத்தை செய்யுது. இந்த மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்னு சத்தியமா புரியல. அதை புரிஞ்சுக்கிற சக்தி நமக்கு இல்லையோன்னு தோணுது. நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.<br />
<br />
கடவுளே மஹாலிங்கம், எல்லாரும் எப்போதும் நிம்மதியா இருக்கணும்..<br />
<br />
சதுரகிரி நாயகனே போற்றி. சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-35608035526201017692012-03-01T15:15:00.000+05:302012-03-01T15:15:18.337+05:30கடலளவு அன்பு...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நம் ஆழ்மனதில் கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற பல எதிர்மறை உணர்வுகள் ஆழமாக படிந்து கிடக்கிறது.<br />
<br />
இவற்றை தூண்ட வெளியிலிருந்து வரும் ஒரு எதிர்மறை சொல்லோ அல்லது நமக்குப் பிடிக்காத சிறிய செயலோ போதுமானதாக இருக்கிறது. உடனடியாக இந்த உணர்வுகள் மின் அலைகளாக நம் உடல் முழுதும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.<br />
<br />
இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாம் இந்த சந்தர்ப்பத்தில் செய்யும் எதிர்வினைகளைத்தான். இநத உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது இந்த எதிர்வினைகள்தான். <br />
<br />
இதுதான் நம் உறவுகளைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.<br />
<br />
நம் வாழ்வில் பலவித மனிதர்களை பலவித சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம். அவர்களுடனான நமது தகவல் பரிமாற்றங்களின் போது ஏற்படும் சில தவறான புரிதல்களால் நாம் செய்யும் எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் நமக்கு பலவித இழப்புகளை ஏற்படுத்தி விடும். இது நமது உறவுகளில் மட்டுமல்ல; அலுவலக நிமித்தங்களிலும், தொழில் நிமித்தங்களிலும் மிகவும் முக்கியமானதுகூட.<br />
<br />
நமக்கு சமமானநிலையில் இருக்கும் எதிரியிடமோ அல்லது நண்பருடனோ அல்லது சக ஊழியருடனோ இப்படிப்பட்ட எதிர்வினைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் இது தவறாவனவர்கள் / நமக்கு சமமில்லாதவர்கள் முன்னிலையில், ஒரு தவறான சூழலில் வெளிப்படும்போது பிரளயமே எற்படுமளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது.<br />
<br />
ஒருவர் எவ்வளவுதான் நம் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டினாலும் ஒரு நேர்மறையான எதிர்வினை செய்வது ஒரு சாமானிய செயல் அல்ல. ஆனால் இதை கற்றுக் கொள்ளவேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றுதான் நான் நினைக்கிறேன்.<br />
<br />
இதை எப்படிக் கற்றுக் கொள்வது? நல்ல கேள்விதான். <br />
<br />
இதை கற்றுக் கொள்ளும் முன் நமக்கு ஒரு முன் தகுதி தேவைப்படுகிறது. அது நம் மனதை அன்பால் நிறைப்பது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு நம் மனதில் நிறைத்துக் கொள்ளவேண்டும். கடலளவு, அந்த ஆகாயம் அளவுக்கு.<br />
<br />
ஒரு குடம் நீரில் ஒரு துளி விசம் விழுந்தால் அந்த ஒரு குடம் நீரும் விசமாகிப்போகும்.<br />
<br />
ஆனால் அதே ஒரு துளி விசம் கடலில் விழுந்தால்??? கடல் கடலாகவே இருக்கும். விசம் அதில் கரைந்துபோகும்.<br />
<br />
இதுதான் சூட்சுமம். நம் மனம் அன்பால் நிறைந்திருக்கும்போது எதிரில் வரும் எதிர்மறை சொல்லாலோ செயலாலோ நம் மனம் எதிர்மறை உணர்வுகளை வெளியிடுவது குறைந்துபோகும். இன்னும் அன்பால் நம் மனம் நிறையும்போது மறைந்தே போகும்.<br />
<br />
அன்பால் மனதை நிறைப்போம்... உலகை வெல்வோம்...<br />
<br />
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-19939217974131970692012-02-14T14:30:00.002+05:302012-02-14T14:30:51.803+05:30நம் சுய ஆத்ம தரிசனம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய தரிசனம்.<br />
<br />
உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக செயல்பாடுகளை செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக, சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.<br />
<br />
இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில குறிப்புகள் கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள் :<br />
<br />
* நமக்கு பிடிக்காதவர்கள் முன் நம் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலையில்<br />
<br />
* நமக்கு பிடிக்காதவர்கள் நம் முன் அவர்கள் தேவைக்காக கையேந்தி நிற்கும் நிலையில்<br />
<br />
* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ முடிந்து உதவாமல் இருக்கும் பொழுது<br />
<br />
* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ நினைத்தும் முடியாமல் போகும்போது<br />
<br />
* நமக்கு பிரச்சினையின் போது உதவாதவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது<br />
<br />
* நமக்கு பிரச்சினையின் போது உதவியவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது நம் உதவ முடியாமல் போகும்போது<br />
<br />
இப்படி இன்னும் பல அசாதாரண சூழல்களில் நம் மனதில் ஏற்படும் சிந்தனையின் செரிவுகள், நம்மை பண்படுத்தவோ அல்லது பாழ்படுத்தவோ செய்யும். அது நம் உண்மையான சுயத்தின் தரிசனமாகவும் பல நேரங்களில் அமைவதுண்டு.<br />
<br />
நம் சுயத்தின் பிரச்சினை எங்கு இருக்கிறது என நாம் காணும் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் இவை. அவற்றை நாம் சற்று நிதானமாக அணுகி சிறப்பாக அந்த சூழலைக் கையாண்டால் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாதது. <br />
<br />
ஆனால் பெரும்பாலும் நமக்கு இருக்கும் அப்போதைய மனநிலை சுய ஆத்ம ஆராய்ச்சியைவிட சுய ஆதாய ஆராய்ச்சியிலேதான் கவனம் செலுத்தும். இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.<br />
<br />
கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எங்க எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஆத்ம சுய சோதனைகளை செம்மையாக கடக்க அருள் செய்யுங்க..<br />
<br />
சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்! சரணம்!!</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-69027525807300218042012-02-13T16:54:00.000+05:302012-02-13T16:54:55.833+05:30வாழ்க்கைத் தேடுதல்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நம் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம். <br />
<br />
பிறந்ததும் தாயைத் தேடுகிறோம்<br />
வளரும்போது அறிவைத் தேடுகிறோம்<br />
இளைஞனானதும் காதலைத் தேடுகிறோம்<br />
நடு வயதில் பணத்தைத் தேடுகிறோம்<br />
முதுமையில் பாசத்தை / அரவணைப்பைத் தேடுகிறோம்<br />
<br />
தேடுதல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது. நமது எந்தத் தேடுதலும் முடிவடைவதில்லை என்பதே நிஜம். இதை நான் தேடி முடித்து விட்டேன் என யாராலும் முழு மனதுடன் சொல்ல முடிவதில்லை. <br />
<br />
தாயைத் தேடுவதன் தொடர்ச்சியே காதலியை/மனைவியைத் தேடுதல்...<br />
பணம் தேடுதல் நிறுத்தப்படுவதே இல்லை..<br />
அறிவுத் தேடல் என்பது முடிவில்லாதது...<br />
பாசத்தை எவ்வளவு தேடினாலும் உண்மையான பாசம் அதுதானா என்ற பரிதவிப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறதே...<br />
<br />
இவ்வாறு மனிதன் பல விசயங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் எதிலும் முழுமை அடைய முடியாதவனாகவே இருக்கிறான்.<br />
<br />
ஞானிகளும் யோகிகளும் சொல்லும் தேடுதல் வேறு விதமானதாக இருக்கிறது. அவர்கள் நம்மையே தேடச் சொல்கிறார்கள். இந்த தேடலின் முடிவு நம் எல்லாத் தேடல்களின் முடிவு எனவும் கூறுகிறார்கள். நம்மை அறிந்தால் நாம் அனைத்ததையும் அறிந்தவர்களாகிறோம் என்கிறார்கள். <br />
<br />
இதற்கு பக்தி, யோகா, தியானம், கர்மயோகம், மானுடசேவை என பல வழிகளை சொல்கிறார்கள். "நம்மை அறிதல்" என்பது இந்த வழிகளின் மூலம் சாத்தியமே என்றும் உரைக்கிறார்கள்.<br />
<br />
எந்த ஒரு மனிதனும் முழுமை பெற்றால்தான் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். அவ்வாறு முழுமை பெற இந்த ஆத்ம சாதகங்கங்கள் மிகவும் அவசியம். <br />
<br />
இதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இருந்தால் இந்த தேடுதல் பயணம் சுலபமாக இருக்கும். அவ்வளவே..<br />
<br />
கடவுளே மஹாலிங்கம்.. உங்க கடாட்சத்தினால் எல்லோருக்கும் இந்த "தன்னை அறிதல்" என்கின்ற விசயம் விரைவில் கைகூட அருள் செய்யுங்க..<br />
<br />
சதுரகிரி சுந்தரனே போற்றி!! போற்றி!!</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-6045841262767684792012-02-08T17:26:00.001+05:302012-02-08T17:26:49.207+05:30எது அன்பு??!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">அன்பு செலுத்துதல் என்பது எல்லோரும் செய்யும் ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் எனக்கு சில நாட்களாக இதில் பெருத்த மனக் குழப்பம். பல கேள்விகள் என்னுள் எழுந்து ஆட்டிப்படைக்கின்றன. அதில் சில...<br />
<br />
* எது அன்பு? <br />
* எந்த விஷயத்தை நாம் அன்பு என சொல்கிறோம்? <br />
* கருணையும் அன்பும் ஒன்றா? <br />
* அன்பும்/ கருணையும் உடையவரையே பெரும்பாலும் எளிதாக ஏமாற்றுகிறார்களே? அது ஏன்? <br />
* அன்பு இருப்பவர்கள் மீது அதிகம் கோபம் கொள்வது இயல்பானதாக இருக்கிறதே அது ஏன்? <br />
* அன்பு பலமுள்ளது என்றால் ஏன் அன்புள்ளவர்களை பலவீனமானவர்களைப் போல் நடத்துகிறார்கள்? <br />
* கடமைக்கு பிரியமாக இருப்பது என்பது இருக்கிறதா? அதுவும் அன்பு ஆகுமா? <br />
<br />
இந்த குழப்பக் கேள்விகளுக்கு எல்லாம் நேரடியாக விடைகள் கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்கு அடிப்படையான சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே குழப்பம் தீரும் என்று எண்ணுகிறேன். <br />
<br />
எது அன்பு?<br />
<br />
<span style="font-size: large;">நம் மனதில் சக மனிதன் மேல், உயிரின் மேல் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சியான ஈடுபாடுதான் அன்பு</span> என நான் அனுமானிக்கிறேன். மேற்கண்ட குழப்பக் கேள்விகளுக்கான பதில் இந்த அனுமானத்தில்தான் அடங்கி இருக்கிறது.<br />
<br />
நம் வாழ்வியலை நிர்ணயிக்கும் மற்றும் பல சந்தேகங்களுக்கான விடைகாண உதவும் கிளைக்கேள்வி இதிலிருந்துதான் பிறக்கிறது. <br />
<br />
<span style="font-size: large;">இந்த பிறர் மீது வெளிப்படும் மகிழ்ச்சியான ஈடுபாடு இயல்பாக இருக்கிறதா அல்லது அது ஒரு போலியான நடிப்பாக இருக்கிறதா அல்லது ஒரு கயமைத்தனத்துடன் வெளிப்படுகிறதா அல்லது கடனே என்று வெளிப்படுகிறதா அல்லது ஏதாவது ஆதாயத்துக்காக நடிக்கும்போது வெளிப்படுகிறதா?</span><br />
<br />
இந்த கிளைக் கேள்விக்கான நம் ஆத்மார்த்தமான உண்மையான பதில் என்ன என்பதில்தான் நமக்கு இந்த அன்பினால் கிடைக்கும் பிரதி பலிப்புகளின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.<br />
<br />
எதை நாம் எண்ணுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என உளவியல் சொல்கிறது. அதுபோல் நாம் என்ன நினைத்து எப்படி அன்பு செலுத்துகிறோமோ அதுபோன்ற பிரதிபலிப்புதான் நமக்கும் கிடைக்கும். அன்பு செலுத்துவதால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் தான் மூல காரணம்.<br />
<br />
பிறர் மேல் காட்டப்படும் அன்பு மட்டும் அன்பு அல்ல.. நம்மை நாமேயும் அன்பு செய்து கொள்ள வேண்டும். அதாவது சற்று சுய நலமாகவும் சிந்திக்க பழகவேண்டும். <br />
<br />
சுயநலமும் பொதுநலனும் நம் சிந்தனையில் கலந்தே இருக்க வேண்டும். இதில் ஒரு சமநிலை அல்லது சரிவிகித நிலை ஏற்படும்போதுதான் அன்பினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். அந்த சரிவிகிதம் என்பது ஒவ்வொருவரின் சுற்றத்தையும் சூழலையும் வாழ்வியலையும் வளர்ப்பையும் பொறுத்தே அமையும்.<br />
<br />
இயல்பாக செலுத்தப்படும் சரிவிகித அன்புதான் பாதுகாப்பான சுபிட்சமான வாழ்வின் சூட்சுமம்.<br />
<br />
உண்மையில் பிரதிபலன் பாராமல் செய்யப்படும் அன்புக்கு எப்போதும் பாதிப்பு குறைவுதான்.ஆனால் இது இந்த காலத்தில் சாத்தியமா என்றால் என் பதில் முயன்றால் முடியாயது ஒன்றும் இல்லை என்பதே..<br />
<br />
இனி.. இயல்பாக அன்பு செலுத்த முடியாதவர்கள் அதை செய்வது எப்படி?<br />
<br />
முதலில் அன்பு செலுத்துவதை ஒரு கடமை போல நினைத்து செய்து பழக ஆரம்பிக்க வேண்டும். இதனால் சில பல பாதிப்புகள் இருந்தாலும் இதுதான் முதல்படி. இது படிப்படியாக நம் இயல்பான பழக்கமாக மாறும்.<br />
<br />
அந்த இயல்பான அன்பு காலப்போக்கில் ஒரு மிகப் பெரிய பிராண / ஆத்ம சக்தியாக உருவெடுக்கிறது. இந்த சக்தி எந்த ஒரு எதிர்மறை விளைவையும் முறியடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.<br />
<br />
கடவுளே மஹாலிங்கம், உங்க அருளால இந்த அன்பு என்னும் அற்புதம் இயல்பா வெளிப்பட எனக்கும் எல்லோருக்கும் அருள் செய்யுங்க...<br />
<br />
சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-65447233923401277432012-01-27T12:19:00.000+05:302012-01-27T12:19:08.038+05:30நம் குடியரசுக்கு வந்த வியாதிகள்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நம் தேசம் சுதந்திரமடைந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தை கைக்கொண்ட நினைவு தினம் நம் குடியரசு தினம். இந்த நாளில் நமது தேசத்தின் முன்னேற்றத்தினை தடுத்துக்கொண்டிருக்கும் சில பிரச்சினைகளை பற்றிய எனது அனுமானத்தை முன் வைக்கிறேன்..</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தனிமனித ஒழுக்கமும், கடமை உணர்வும், நேர்மையும், சத்தியமும் அபாயமான அளவுக்கு குறைந்துபோனது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மக்களிடையே குறைந்துவரும் சமூக பொறுப்பும், அதிகரிக்கும் வடிகட்டிய சுயநல சிந்தனைகளும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பணம் பிரதானமாகவும், மனிதம் கடைசியாகவும் கருத்தப்படும் ஒரு வாழ்வியலை கைக்கொள்ளும் ஒரு தலைமுறை உருவெடுத்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதிகரித்துவரும் குடி/போதைப்பழக்கமும், அதுதான் நாகரீகம் என இளைய சமுதாயம் தீவிரமாக நம்புவதும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிதைந்துவரும் விவசாயத்தை அடியோடு புறக்கணிக்கும் அரசாங்கம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அரசாங்கத்தில் மலிந்துவிட்ட லஞ்சமும் ஊழலும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதிகரிக்கும் விலைவாசியும், உயரும் வறுமையும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சட்டங்கள் சரியான முறையில், எல்லோருக்கும் சமமாக அமல் படுத்தப்படாதது. வலுத்தவனுக்கு ஒருவிதமாகவும், இளைத்தவனுக்கு ஒருவிதமாகவும் அமலாகும் சட்டங்களும் அதை அமல்படுத்துபவர்களும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சட்டங்களில் இவ்வளவு ஓட்டைகள் இருப்பது தெரிந்தும் அதை அடைக்க யாரும் பெரிய அளவில் முயற்சி செய்யாதது. மற்றும் புதிய சட்டங்கள் செய்யும்போதும் பொத்தல்களுடனேயே செய்ய முனைவது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கடவுளே, மஹாலிங்கம், நினைக்கையிலேயே கண்ணைக் கட்டுதே.. ஏதாவது செஞ்சு நம்ம தேசத்து மக்களை காப்பாத்துங்க..</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சதுரகிரி நாயகனே சரணம்.. சரணம்..</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-53036830872723587192012-01-17T12:55:00.000+05:302012-01-17T12:55:03.766+05:30அடிப்படை ஆரம்பக் கல்வி..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">எனது 5 வயது மகனையும் இன்னும் 4 மாணவர்களையும் இந்த கல்வியாண்டில் இருந்து , வகுப்பில் நன்றாக படிப்பதாக சொல்லி, எல் கே ஜி யில் இருந்து நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர சொல்லி இருந்தார்கள். <br />
<br />
கடந்த சில நாட்களாக அவன் பள்ளி செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறான். புதிய வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இந்த அவஸ்தைதான். நேற்று, எனது மகனை படிக்க சொன்னபோது அழ ஆரம்பித்து விட்டான். நானும் பொறுமையாக அவனுக்கு எடுத்து சொல்லி படிக்க வைத்தேன். ஆனால் அவனால் எழுத்துக்களை முழுமையாக ஞாபகம் வைக்க முடியவில்லை என்பதையும் எழுத்து கூட்டி படிக்க முடியவில்லை என்பதையும் கவனித்தேன். <br />
<br />
இன்று அவனது பள்ளியில் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து பேசி சற்று சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் செய்வதாக சொல்லி இருக்கிறார்.<br />
<br />
இது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="font-size: large;"><a href="http://timesofindia.indiatimes.com/india/Reading-maths-ability-declining-in-kids-Survey/articleshow/11518364.cms" target="_parent">Reading, maths ability declining in kids: Survey</a></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதாவது நமது நாட்டின் கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு படிக்கவும் கணித திறமையிலும் அதிகபட்ச குறைபாடுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த செய்தியையும் இன்றைய எனது மகன் சம்பந்தமாக பள்ளியில் பேசிய நிகழ்வையும் இணைத்து என்னால் இந்த செய்திக்கான மூல காரணங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எழுத்துக்களை மாணவர்களுக்கு போதித்து, அடிப்படை வாசிக்கும் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானது. இந்த திறமையை வைத்துத்தான் மற்ற பாடங்களை மாணவர்கள் கற்க முடியும். இதிலேயே தகராறு எனும்போது மிகவும் சிரமம்தான். இதற்கு சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை பயிற்சியை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியின் தார்மீக கடமை. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால், பள்ளியில் பாடத்திட்டத்தை முடிப்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், அதை எத்தனை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் பெரும்பான்மை மாணவர்களாவது புரிந்து கொள்ளுமளவுக்கு அடிப்படை கல்வியை கவனமாக போதிப்பதில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்போது எழுதப்படிக்க கற்றுத்தரும் ஆரம்பக்கல்வி என்பது சில நாட்களுக்குள் முடித்து மேற்பாடங்களை போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு அரசு தலையிட்டு சரியான பாடத்திட்டம் உருவாக்கி, அதை முறையாக பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இப்படிப் பட்ட சம்பளம் தருவதில்லை. இதனால் ஒரு சிலர் தவிர மற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நம் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்களா என கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் உடனடியாக பள்ளியில் சென்று வகுப்பு ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து ஆலோசனை செய்து ஆரம்பக் கல்வி சரியாக குழந்தைகளை அடைய ஆவன செய்ய வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்றைய சமூக சூழலில் டி வியும், இணையமும், சினிமாவும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் வீட்டில் டிவியிலும் கணிணியிலும் தம் கவனத்தை அதிகம் வைக்கிறார்கள். நாம்தான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மொத்ததில் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பதில் அரசு, பள்ளி, ஆசிரியர், பெற்றோர் என்ற நான்கு சமூகமும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சதுரகிரி சுந்தர மஹாலிங்கம், ஆரம்பக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் செம்மையாக கிடைக்க அருள் செய்யுங்க..</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-68369234796845301732012-01-09T17:50:00.000+05:302012-01-09T17:50:46.157+05:30கடவுள் மறுப்பு ஏன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">கடவுளைப் பற்றிய பல விவாதங்களில் என்னிடம் எழுப்பட்ட பல சந்தேகங்களில் இருந்து ஏன் சிலர் கடவுளை மறுக்கிறார்கள் என ஆராய முற்பட்டதன் விளைவுதான் இந்த பதிவு. கடவுள் மறுப்பு என்பது அவர்களின் விருப்பம் என்றாலும், அவர்கள் இதுகுறித்து எழுப்பிய சில கேள்விகள் மிகவும் சங்கடமானவையே. அது குறித்து :</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">1) கடவுள் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்தான் கடவுள் மறுப்பின் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இதில் கடவுள் பங்கு நேரடியாக இல்லை எனினும், கடவுளை முன்னிறுத்தி சில சமூகத்தினர் விளையாடிய அரசியல் விளையாட்டில் வாழ்வையும் உரிமையையும் பல தலைமுறைகளாக பறிகொடுத்தனர் பலர். அந்த அழுத்தத்தின் விளைவு கடவுள் மறுப்பாக வெளிப்பட்டது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2) கடவுள் என்பவர் மந்திர / மாய சக்தி கொண்ட இன்னொரு மனிதராக அடையாளப்படுத்தி எண்ணுதல். அப்படிப்பட்ட யாரும் இங்கு வெளியில் இல்லை. நமக்குள்ளே இருக்கும் கடவுளை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அடையாளக் குறியீடுகள்தான் இந்த கடவுளர்கள். இது கடவுளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">3) கடவுள் என்று ஒருவர் இருந்தால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வோ, ஊழல், லஞ்சம், துரோகம், போர், இயற்கை சீற்றம் இவை இருக்க முடியாது/ கூடாது என எண்ணுதல். அந்தர் யாமியாக நமக்குள் இருக்கும் கடவுள் நம் மூலம்தான் செயல்படுகிறார். மேலும் கடவுள் நன்மை மட்டுமே செய்பவர் என்ற மாய தோற்றமும் இருக்கிறது. நாம் செய்யும் நல்ல வினைகளுக்கு நல்ல செயல்களும், தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார். நம்மைப் போன்ற மனிதர்களாலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கர்ம வினைகளாலும்தான் இந்த சமூக அரசியல் இவ்வாறு இருக்கிறதே ஒழிய இது கடவுளின் விருப்பப்பட்ட நேரடி செயல் அல்ல. இதுவும் கடவுளை தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான். மனிதன் செய்யும் வினைகளுக்கு கடவுளை பலிகடா ஆக்கி விட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">4) நம் வாழ்வில் ஏற்படு நல் / தீய கர்மங்கள் பற்றிய குறுகிய அறிவு. நாம் காணும் வாழ்க்கை / பிறப்பு என்பது இப்போது இருப்பது மட்டுமல்ல. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது. ஆனால் இந்த பல பிறவிகளைப் பற்றிய தேற்றம் பொதுவில் நிறுவ முடியாதபடி இருப்பதால் இந்த குழப்பம் வந்து கடவுள் மறுப்பாக மறுவி விட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">5) இறுதியாக சமூக சூழல் சம்பந்தப்பட்டது. சேரும் நட்பும் சுற்றமும் கடவுள் மறுப்பில் இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு தானும் கடவுள் மறுப்பை கைகொள்வது. எப்படி ஒரு மதத்தினரின் குடும்ப சூழலில் வளரும் குழந்தை அந்த மதத்தை கைகொள்கிறதோ அதுபோல.மொத்தத்தில் கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><u><i>மனிதன் கடவுளை மறுப்பதில் தவறு எதுவும் இல்லை. தன் வாழ்வில் நேர்மையும், தன்னம்பிக்கையும், மனசாட்சிப்படி நடக்கும் வல்லமையும், சக மனிதனின் மேல் அக்கரையும், அன்பும் உடைய எவரும் கடவுளை நம்ப அவசியமில்லை. ஒவ்வொரு மதமும், கடவுளும் மனிதனுக்கு இதை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.</i></u></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கடவுளே மஹாலிங்கம், இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும், நேர்மையோடும், சக மனிதன் மேல் அன்பும், அக்கரையும் கொண்டு, மனசாட்சிப்படி நடக்க நீங்கதான் அருள் செய்யணும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சதுரகிரி சுந்தமஹாலிங்கத்துக்கு அரோஹரா...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-92101075443694707222012-01-06T16:21:00.000+05:302012-01-06T16:21:16.326+05:30கடவுள் இருக்கிறாரா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">சில வருடங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருடன் காரசாரமான விவாதம். கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றி. கடவுள் இருக்கிறார் என நானும், கடவுள் என்பவர் இல்லவே இல்லை, எல்லாம் ஏமாற்று வேலை என என் நண்பரும்.<br />
<br />
வாதங்களும் பிரதி வாதங்களும் மாற்றி மாற்றி சுழற்றி அடிக்க, இருவருமே அவரவர் நிலையில் இருந்து இறங்கவே இல்லை. சலித்து விட்டது. கடைசி வரை என்னால் எனது நண்பரை கடவுள் இருக்கிறார் என நம்ப வைக்க முடியவில்லை. அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது.<br />
<br />
சில நாட்கள் கழித்து எனது இன்னொரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். அவர் அப்போது இந்த கடவுள் விவாதம் குறித்து எனக்கு கூறிய சில விசயங்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதானதாக இருந்தது. அவற்றில் சில :<br />
<br />
1) மனிதன் கடவுளை தன் புலன்களால் உணர நினைக்கிறான். ஆனால் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். <br />
<br />
2) நாம் வேண்டியதை உடனேயே நிறைவேற்றி தரும் கடவுளையே எல்லோரும் தேடுகின்றார்கள். ஆனால் கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டு நிற்கிறார். எல்லோருக்கும் எல்லா வேண்டுதல்களும் எப்போதுமே நிறைவேறுவதில்லை. <br />
<br />
3) கடவுளை வணங்கினால் அவர்களுக்கு பிரச்சினைகள் வராது அல்லது குறைவாக வரும் என்பது மூட நம்பிக்கை. அதிகம் கடவுளை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய கர்ம கணக்கு விரைவில் தீர அதிக கஷ்டங்கள் வரும் வாய்ப்புதான் அதிகம்.<br />
<br />
4) எவ்வளவு தவறு செய்தாலும் கடவுளிடம் சென்று ஒரு முறை மன்னிப்பு கேட்டால் அல்லது காணிக்கை செலுத்தினால் எல்லாம் சரியாகி விடும். மீண்டும் அடுத்த தவறு செய்ய தயாராகலாம். இதுவும் ஒரு மடத்தனமான நம்பிக்கை. <br />
<br />
5) கர்மா என்று ஒன்று இருக்கிறது, இது பாவம், இது புண்ணியம் என நம்புகின்றவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது ஏற்படுத்த முடியும். கர்மாவை நம்பாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது.<br />
<br />
6) கடவுள் என்பதை நம்புவது அவரவர் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் அளவையும் அவற்றை தீர்க்க அவரவருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களின் நிலையையும் பொருத்தது. <br />
<br />
சிலருக்கு கஷ்டங்கள் வரும்போதே அவற்றுக்கான தீர்வும் உடன் வரும். இவர்களுக்கு பல நேரம் ஓரளவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும்.<br />
<br />
சிலருக்கு கஷ்டங்களை அதிகம் அனுபவித்த பிறகு அவர்கள் நம்பிக்கையின் விளிம்பில் இருக்கும் போது தீர்வு வரும். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.<br />
<br />
சிலருக்கு கஷ்டங்களின் விடிவு என்பது அவர்கள் காணும்போது வராமலே போகலாம். இவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவோ அல்லது ஞானிகளாகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது.</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><br />
சிலர் கஷ்டங்களே ஏற்படாத ஒரு வசதியான நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு அவரவர் குடும்ப, நட்பு சூழலைப் பொறுத்து கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது இல்லாமல் போகும்.</div><div style="text-align: justify;"><br />
7) கடவுளை அவரவரே சாதகம் செய்து, கஷ்டப்பட்டு உணரவேண்டும். ஒருவர் வார்த்தைகளில் போதித்து மட்டும் இன்னொருவர் நிச்சயம் உணர முடியாது. எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அது அவரவரே உணர்ந்து கொள்ளட்டும். இன்றைக்கு இல்லை என்று சொல்பவர் நாளைக்கே இருக்கிறது என்றும் சொல்லலாம். இன்றைக்கு இருக்கிறது என்று சொல்பவர் நாளைக்கே இல்லை என்றும் சொல்லலாம். அது கடவுள் தன்னை யாரிடம் எப்போது வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ அதைப் பொறுத்தது.<br />
<br />
<br />
கடவுளே மஹாலிங்கம்.. நீங்க உங்களை எல்லோரிடத்தும் வெளிப்படுத்திக் கிடணும்னு வேண்டிக்கிறேன்.<br />
<br />
சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-46075458157927898872012-01-04T15:23:00.000+05:302012-01-04T15:23:14.088+05:30ஆனந்த வாழ்வின் சூத்திரம்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது.<br />
<br />
புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம்.<br />
<br />
நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் துக்கம் உண்டாக்கி விடுகின்றன.<br />
<br />
குடும்பம், குழந்தை, வேலை, அயல்நாடு, ஆடம்பரப் பொருட்கள்... எல்லாவற்றிலும் இன்பமும் இருக்கின்றது.. துன்பமும் இருக்கின்றது.<br />
<br />
வாழ்வில் எல்லாமே ஆனந்தமும் துக்கமும் கலந்தே இருக்கின்றன. ஆனந்தம் மட்டுமே தருவது என்றோ, துக்கம் மட்டுமே தருவது என்றோ எதுவுமே இல்லை. <br />
<br />
நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலிலும் ஆனந்த மயமான ஒரு பகுதி உண்டும். அதை பார்க்க கற்றுக் கொண்டு துக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நம் மனம் பழக வில்லை என்பதுதான் நிஜம்.<br />
<br />
உண்மையில் யோசித்துப் பார்த்தால், இந்த ஆனந்தமும் துக்கமும் வெளியுலக விஷயங்களுக்கு தொடர்பு இல்லாதது புரியும். உண்மையில் நம் மனம் நம் அகங்காரத்துடன் கை கோர்த்து நமக்குள் நடத்தும் நாடகம் தான் ஆனந்தமும் துக்கமும்.<br />
<br />
மனித ஆத்மாவின் இயல்பு ஆனந்தம்தான். எனவேதான் நாம் அந்த ஆனந்தத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றோம். அது வெளியில் எங்கும் இல்லை. நம் மனதில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. மனம் ஆழ்ந்த அமைதி பெறும்போது இந்த ஆனந்தம் தானே வெளி வருகிறது.<br />
<br />
நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமே இந்த உள்ளிருக்கும் ஆனந்தத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பதுதான். ஆன்மீகம் அதற்கு பெரிதும் துணை புரிகிறது. தியானமும் யோகமும் நமக்கு இந்த ஆனந்தத்தை கண்டுபிடித்து தருகின்றன.<br />
<br />
வெளிச்சம் போன்ற இந்த ஆன்ம ஆனந்தம் இருக்கும்போது மனம் தானாகவே துக்கம் எனும் இருளை விரட்டி விடுகிறது. இந்த ஆனந்த வெளிச்சம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைகிறது. இதுதான் ஆனந்த வாழ்வின் சூத்திரம்.<br />
<br />
கடவுளே மஹாலிங்கம்.. எல்லோரும் ஒரு ஆனந்தமயமான வாழ்வை வாழ அருள் செய்யுங்க..<br />
<br />
சதுரகிரி நாயகனே சரணம்..</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-34208069191859989632011-12-30T16:44:00.001+05:302011-12-30T16:45:55.405+05:30ஆண்டவன் திருவிளையாடல் - 4a குருவைத் தேடி-2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">குரு அடையாளம் தெரிந்த சில நாட்களில் மீண்டும் குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது. நம் குருவுக்கும் நாம் கும்பிடும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரையும் அருவமாகவே உணர முடிகிறது. நேரில் இருக்கும் குரு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.<br />
<br />
எனது குருதேவரிடமே மீண்டும் பிரார்த்தனை ஆரம்பித்தது. எனக்கு தங்கள் ஆசியை கொண்டுவந்து கொடுப்பவர் இன்னார்தான் என அடையாளம் காட்ட வேண்டினேன். <br />
<br />
இந்த நேரத்தில், எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. உண்மையில் மனம் உடைந்து விட்டது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட காலம் என்பதால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 45 நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சென்றுவிட்டேன். சம்பளம் தருவார்களா என தெரியவில்லை. சோதனை மேல் சோதனை. குருவின் மீது பாரத்தைப் போட்டு இருந்தேன்.<br />
<br />
அப்போது மன அழுத்தம் மிக அதிகமாகி கடவுள், குரு, சுற்றம், நட்பு எல்லாம் என்னை விட்டு விலகி அனாதை ஆகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு ஆட்கொண்ட நேரம்.<br />
<br />
அப்போது ஆனந்த விகடன் புத்தகத்தில் ஒரு ராஜ யோக பயிற்சியாளர் பண சம்பத்தை அளிக்கும் பூஜை கற்றுத்தர ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். ஜாதகத்துடன் விண்ணப்பிக்க சொல்லி இருந்தது.<br />
<br />
இதற்கு விண்ணப்பித்து, அந்த பூஜைகள் செய்து ஏதாவது மாறுதல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் ஒரு விண்ணப்பம் தட்டி விட்டேன். சில நாட்களில் அதை மறந்தும் விட்டேன்.<br />
<br />
உடல்நிலை ஓரளவு தேறி, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு அந்த ராஜ யோக பயிற்சியாளர், அந்த பூஜை முறை கற்றுக்கொள்ள எனக்கு தகுதி இருப்பதாகவும், உடனடியாக கிளம்பி வரவும் என கடிதம் அனுப்பி இருந்தார்.<br />
<br />
அந்த கடிதத்தை படித்த விநாடியில் இருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது. மனம் ஒரு நிலையில் இல்லை. கட்டுப்பாடு இழந்து சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. ஆனால் பணம் செலவளித்து இதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை அலைக்களித்தது.<br />
<br />
மறுநாள் மீண்டும் மனதில் ஒருவிதமான வித்தியாசமான உணர்வு பரவுவதை உணர்ந்தேன். இப்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற ஒரு உணர்வில் மயக்கமான நிலைக்கு போய்விட்டேன். <br />
<br />
எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னை கவனித்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டினார். நான் நடந்த விசயங்களை சொல்லி அந்த ராஜ யோக பயிற்சியாளர் அனுப்பிய கடிதத்தை காண்பித்தேன்.<br />
<br />
அவர் உடனடியாக ஒரு ஆஞ்சனேய உபாசகரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் சென்று பார்க்கும்படி கூறினார். அங்கு சென்றதும் அவர் என்னிடம் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து, எனக்கு திருஷ்டி பாதிப்பு இருப்பதாகவும், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி அது செய்ய வைத்தார்.<br />
<br />
அப்போதிலிருந்து தொடர்ந்து சுமார் 10 நாட்கள், அந்த பயம் போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தியான ஆசிரியரிடம் ஏதாவது தியானம் மூலம் இதை சரி செய்ய முடியுமா என்று வினவினேன். அவர் அந்த ஆஞ்சனேய பக்தரிடம் தொடர்ந்து சென்று வர ஆலோசனை வழங்கினார்.<br />
<br />
இந்த நிலையில் எனது சகஜ மார்க்க நண்பர்கள் மூலம் அவர்களின் தியானமுறையில் இதை சரி செய்ய முடியுமா என முயற்சித்தேன். ஆனால் அவர்கள் தியானம் கற்றுக் கொண்டால்தான் அது குறித்து முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு சுமார் ஒரு மணிநேரம் அதன் முக்கியத்துவதுவம் குறித்து விளக்க உரையும் கொடுத்தார்கள். எனக்கு தியானம் புதிதாக கற்றுகொள்ள விருப்பம் இல்லை என கூறி விட்டு அப்போது வந்து விட்டேன்.<br />
<br />
ஆனால் மறுநாள் என்னால் வீட்டில் இருக்க முடிய வில்லை. எப்படியாவது சகஜ மார்க்க தியானம் கற்று கொள்ள வேண்டும் என்று என் மனதில் இருந்து திரும்ப திரும்ப சிந்தனை வந்து கொண்டிருந்தது. அது ஒரு மிகப் பெரிய உந்து சக்தி போல என்னைத் தள்ள ஆரம்பித்தது. தாங்க முடியவில்லை என்னால்.<br />
<br />
உடனடியாக எனது தியான ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, சில நாட்கள் சகஜ மார்க்க தியானம் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். அதற்கு தங்கள் அனுமதி தேவை என விண்ணப்பித்தேன். அவர் என்னை நேரில் வரும்படி பணித்தார்.<br />
<br />
எங்கள் குழு தியான அறையில் தியான ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டேன். மானசீகமாக என் குருநாதர் விக்கிரகத்துக்கு முன் மண்டியிட்டு என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் எந்த நிலையிலும் எனக்கு துணையாக இருக்கும்படியும் வேண்டினேன்.<br />
<br />
சிறிது நேரத்தில் தியான ஆசிரியர் அந்த அறைக்குள் வந்தார். நேராக குருவின் மூர்த்திக்கு ஆரத்தி காண்பித்து என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, எந்த தியானமானாலும் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி பாதியில் விட்டு செல்லக்கூடாது. மாற்றி மாற்றி தியானம் செய்தால் அது நல்லதல்ல என அறிவுரை கூறினார். பிறகு வேறு தியானம் செய்வது என் சொந்த விருப்பம் எனவும், சிறிது நேரம் தியான அறையில் ஓய்வு எடுத்துவிட்டு செல்லும் படியும் பணித்து சென்றுவிட்டார்.<br />
<br />
அவர் தியான அறையை விட்டு அகன்ற விநாடியில் என் மனதில் இருந்த அந்த அரிப்பு அகன்று விட்டது. சுமார் 15 நிமிடங்கள் அந்த தியான அறையில் அமைதியாக இருந்த பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு. மனதில் ஒரு தெளிவு. என் குருநாதரின் பரிபூரண ஆசி எங்கள் தியான ஆசிரியர் மூலம் எங்களுக்கு வருவதை குறிப்பால் உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்ததுபோன்ற ஒரு தோற்றம் மனதில் ஏற்பட்டது. வாழ்வோ சாவோ இனி நம் குருதேவருடன் தான் என மன தெளிவு வந்தது. <br />
<br />
அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.<br />
<br />
பிறகு தொடர்ந்து 3 மாதங்கள் சில பரிகாரங்கள் வீட்டில் செய்து அந்த ஆஞ்சனேயர் உபாசகர் மூலம் தாயத்து செய்து அணிந்த பிறகு பூரண குணம் கிடைத்தது.<br />
<br />
சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-19413565748442922322011-12-23T17:13:00.000+05:302011-12-23T17:13:38.106+05:30ஆண்டவன் திருவிளையாடல் - 4 - குருவைத் தேடி.. 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">என்னதான் நாம் கடவுள்மீது பக்தி செலுத்தினாலும் ஒரு குரு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனாலும் யாரை குருவாகக் கொள்வது எனவும் மனதில் ஒரே குழப்பமாகவும் இருந்தது.<br />
<br />
அப்போது எனது நண்பர்கள் சிலர் சகஜ மார்க்கம் எனப்படும் ராமச்சந்திரா மிஷனில் தியானம் செய்பவர்களாக இருந்தார்கள்(இன்னும் இருக்கிறார்கள்). அவர்களை அவ்வப்போது சென்று அவர்கள் மணப்பாக்கம் ஆசிரமத்தில் சந்திப்பேன். <br />
<br />
அந்த ரம்யமான சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் மார்க்கம் சார்ந்த சில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் தியானம் கற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்ததால் கற்றுக் கொள்ளவில்லை. பலவிதமான விசயங்களைப்பற்றி விவாதங்கள் செய்வோம். அதில் கடவுள், பக்தி, தியானம், யோகம் இவைதான் அதிகம் இருக்கும்.<br />
<br />
இந்த சூழலில் எனது குரு தேடலைப் பற்றி தெரிந்த அந்த நண்பர், கடவுளிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்தால் நல்ல குரு அமைவார் என அறிவுறுத்தினார். நான் அப்போதெல்லாம், சைதை காரணீஸ்வரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்கேயே இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.<br />
<br />
இந்த இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மருந்துகளை அறவே நிறுத்திவிட்டு ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து எடுத்து வந்தேன். <br />
<br />
அலுவலகத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் நிலையை அடிக்கடி பாதித்துக் கொண்டே வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஹோமியோபதி மருந்துகள் எடுத்தும் ஒன்றும் பெரிய முன்னேற்றம் இல்லை.<br />
<br />
எனது ஹோமியோபதி மருத்துவர் ஒரு முறை எனது ரத்த அழுத்தத்தை சோதித்தபோது மிக அதிகமாக இருந்தது. அதற்கு மருந்தாக ஆழ்நிலை தியானம் கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். வேறு மருந்து எதுவும் தரவில்லை.<br />
<br />
உடனடியாக மறுநாள் 23 ஜனவரி 1997 அன்று, மஹரிஷி வித்யா மந்திர் சென்று ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன். அப்போதும் எனக்கு ஒரே குழப்பம். இந்த தியானம் சொல்லிக் கொடுப்பவர் தான் எனது குருவா?? இருந்தாலும் ஒரு தெளிவு. நம் பிரார்த்தனைக்கு கடவுள் எப்படி செவி சாய்க்கிறார் என பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.<br />
<br />
தியானம் கற்றுக் கொண்ட சில நாட்களிலேயே எனது ரத்த அழுத்தம் சீராகி விட்டது. இருந்தாலும் மருத்துவர் அறிவுரைப்படி தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன். <br />
<br />
அடுத்த ஆறு மாதங்களில் ஆழ்நிலை தியானத்தின் அடுத்த நிலையான சித்திப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்போது எனக்கே ஒரு ஆர்வம் வர ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஆர்வமுடன், தியானம் செய்ய ஆரம்பித்தேன்.<br />
<br />
தியானம் தொடர்ந்து செய்துவர எனக்கு மனதின் ஆழத்தில் இவர்தான் எனது குரு என அடையாளம் தெரிந்தது. ஆம்!! ஆழ்நிலை தியானம் செய்வதற்காக பூஜை செய்யும் தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள்தான் அது.<br />
<br />
மனதில் மிக ஆழமாக என் குரு பதிந்துவிட்டார். அவர் அப்போது தன் பூத உடலில் இல்லாவிட்டாலும் அவர்தம் கருணை பூரணமாக வியாபித்திருப்பதை உணர முடிந்தது. <br />
<br />
ஜெய் குரு தேவ்...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-41753337959144684962011-12-19T17:06:00.000+05:302011-12-19T17:06:51.032+05:30ஆண்டவன் திருவிளையாடல் 3a - மாரியம்மன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">சென்னைக்கு வந்த புதிது. எனது ஒரு நண்பன் ஒருவருடன் இணைந்து ஒரு ரூம் எடுத்து தங்கினோம்.அவர் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தார். நாங்கள் இணைந்து ரூம் எடுப்பதற்கு முன் ஒரு கிறிஸ்தவ பாஸ்டர் ஒருவரின் குடும்பத்துடன் தங்கி இருந்தார். என்னை அந்த பாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார். <br />
<br />
என்னைப் பார்த்தது முதல் அந்த பாஸ்டர் தன் மதப் பிரச்சாரத்தை தொடங்கினார். கிறிஸ்துதான் ஒரே கடவுள்; மற்ற அனைத்தும் பேய்; அதை வழிபடுபவர்கள் சாத்தான்கள் என்று சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டார்.<br />
<br />
எனக்கே நான் கும்பிடுவது பேய்தானோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு குழப்பிவிட்டார். நானும் அப்போது அவரிடம் பேசி சமாளித்தாலும் நன்றாக குழம்பிவிட்டேன்.<br />
<br />
என் நண்பனும் பாஸ்டரின் அருமை பெருமைகளை பற்றி விலாவரியாக கூறிக்கொண்டிருந்தான். மதம் மாறினால் நம்மை நன்றாக கவனித்துக் கொள்வார்கள், நம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள், வாழ்க்கை விடிந்து விடும் என தூபம் போட்டுக்கொண்டிருந்தான். வாழ்வின் பல பிரச்சினைகளில் இருந்த எனக்குள் முயற்சி செய்தால்தான் என்ன? என்ற சிந்தனைகூட வர ஆரம்பித்து விட்டது.<br />
<br />
மேலும் என்னைப் பயமுறுத்த, அந்த பாஸ்டர் ஒரே மாதத்தில் என்னை மதமாற்றம் செய்ய தீவிர பிரார்த்தனை செய்வதாக கூறி கிலி ஊட்டினான். <br />
<br />
எனக்கு சாமி படத்தை பார்த்தாலே பேயைப் பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. உலகமே எனக்கு ஒரு வித்தியாசமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஆட்கொண்டது. <br />
<br />
இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டே வந்தது. இரண்டு வாரங்களில் தினந்தோறும் ஆஸ்துமா ஊசி போட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. <br />
<br />
இந்த நிலையில் பல விதமான காட்சிகள் மனதில் பிரமைகளாக ஓடுவதை உணர முடிந்தது. எது கடவுள் என்ற சிந்தனை தீவிரமாக ஆட்கொண்டது. <br />
<br />
நாம் அறியும் பெயரும் உருவமும்தான் கடவுளா? இந்த வேறுபாட்டில்தானே மதங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுள் எல்லாமதத்தவரின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறாரே? அது எப்படி? கடவுள் என்பது பெயரை உருவத்தை மீறி இருக்கும் ஒரு சக்தியோ? <br />
<br />
என் சொந்த அனுபவத்தில் ஏற்பட்ட பல கடவுள் அனுபவங்கள் என் மனதில் ஓடுகின்றன. குழப்பம் .. மேலும் குழ்ப்பம்.. <br />
<br />
அப்போது என் நண்பன் என் நிலைமையைப் பார்த்து அந்த பாஸ்டரை என் வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்ய சொல்வதாக சொன்னான். நானும் உடன்பட்டேன். எனக்காக, என் உடல் நலனுக்காக அவரும் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு சென்றார்..<br />
<br />
மறுநாள், காலையில் உடலில் அத்தனை சக்தியும் வடிந்துவிட்டதுபோன்ற ஒரு பிரமை. மிகவும் அசதியாக இருந்தது. மனம் மிகவும் தளர்ந்திருந்தது. <br />
<br />
மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்றேன்.. ஒரே அதிர்ச்சி.. ரத்தமாக மலவாய் வழியாக போக ஆரம்பித்தது.. மனதில் உயிர் பயம் வர ஆரம்பித்தது.. செத்துவிடுவோமோ என்ற சிந்தனை வந்தது.<br />
<br />
உடனடியாக கோவிலுக்கு செல்லவேண்டும் என தோன்றியது. உடனே குளித்து ரெடியாகி இருக்கும் காசை எடுத்துக்கொண்டு மாங்காடு சென்றேன். <br />
<br />
அங்கு சன்னிதி முன் நின்று கோ என தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். வேகுநேர அழுகைக்கு பின், மனதில் ஒரு முடிவு. வாழ்வில் மிக நல்ல நிலைக்கு வந்தால்தான் ஊருக்கு போகவேண்டும். இல்லாவிட்டால் என் தாய் உயிருக்கு போராடினால்தான் என் ஊருக்கு செல்வேன். அதுவரை செல்வதில்லை, என சங்கல்பம் எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டேன்.<br />
<br />
மேலும் சில முறை ரத்தமாக போனது. கவலைப்படவில்லை. ஆவது ஆகட்டும். செத்தால் மொத்த விடுதலை.<br />
<br />
<br />
சுமார் 2 மணி அளவில் என் அலுவலகத்தில் இருந்து என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் கையில் ஒரு பேப்பர். <br />
<br />
என் தாயார் மிகவும் சீரியசாக இருப்பதாக ஊரில் இருந்து தந்தி வந்திருப்பதாக சொன்னார். தலைக்கு மேல் வெள்ளம். கையில் காசில்லை. அலுவலகம் சென்று சம்பளத்தில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.<br />
<br />
பஸ் ஊரை நெருங்க நெருங்க உடலில் ஒரு புது சக்தி வருவதாக உணர்ந்தேன். வேகமாக வீட்டை அடைந்தால், என் தாயார் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். என்ன விசயம் என யாரும் ஒன்றும் கூறவில்லை.<br />
<br />
உடனே என்னைக் கிளப்பிக் கொண்டு குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு வைத்து அப்போது எனக்கு மாவிளக்கு எடுத்தார்கள்..<br />
<br />
எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அப்போது என் தாயார் முன் தினம் மதியம் இருக்கன்குடி வந்திருந்ததாகவும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கு அருள் வந்து உடனடியாக எனக்கு என் தாயார் சீரியசாக இருப்பதாக தந்தி அடித்து வரவழைக்குமாறும் கூறியதாக சொன்னார்கள். நான் இன்னும் இரண்டு நாளில் இங்கு வராவிட்டால் என் உயிருக்கு ஆபத்து என்றும், இப்படி தந்தி கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் எனவும் கூறி இருக்கிறார்கள்..<br />
<br />
எல்லாம் எனக்கு அந்த வினாடியில் விளங்கிவிட்டது. நேற்று என் அம்மாவுக்கு அருள் வாக்கு கிடைத்தது, நான் மாங்காடுவில் பிரார்த்தனை செய்துவிட்டு கிளம்பிய அதே நேரம். <br />
<br />
அந்த காக்கும் தாய் என்னைக் காப்பாற்ற என் தாயை பணித்து இருக்கிறாள்..<br />
<br />
மெய் சிலிர்த்தது. உண்மையான கடவுள் உருவத்திலோ பெயரிலோ இல்லை என புரிந்தது. உண்மையான பக்தியுடனும் ஏக்கத்துடனும் எங்கிருந்து என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அந்த கடவுள் மனிதனுக்கு இரங்குவார் என தெளிந்தது..<br />
<br />
ஓம் சக்தி.. இருக்கன்குடி மாரியம்மனே சரணம்.</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-78640050380960988972011-12-15T14:20:00.000+05:302011-12-15T14:20:32.212+05:30அரசு நிர்வாகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">இன்று நம் தேசத்தின் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது ஒழுங்கற்ற அரசு நிர்வாகம். அரசாங்கம் செயல்படுத்த எண்ணும் ஒவ்வொரு செயலையையும் இப்படிப்பட்ட ஒரு ஒழுங்கற்ற நிர்வாக அமைப்பு எவ்வாறு செம்மையாக செயல்படுத்த முடியும். <br />
<br />
இதில் குறை எங்கு இருக்கிறது?? நிர்வாக அமைப்பில் சில குறைகள் இருந்தாலும் அதை நிர்வகிப்பவர்களில் தான் பெரும் குறை இருக்கிறது. ஒவ்வொரு சட்டமும் நியதியும் நடைமுறைகளும் மக்களை முன்னிறுத்தி, மக்கள் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. <br />
<br />
இந்த மாபெரும் உண்மையை மறந்து, இவற்றை வெறும் வார்த்தைகளாகவும், பொது நலனைவிட சுயநலனுக்காகவும் சில தனிநபர் நலனுக்காக இவற்றை வளைக்கவும் மக்களை வதைக்கவும் இவற்றை பயன்படுத்தும் அதிகாரிகளால்தான் பிரச்சினையே.<br />
<br />
பல அதிகாரிகள் மக்களை வதைப்பதிலும், பொது நலனை சாகடித்து, தனிநபர்களின் நலன் பேணுவதில் ஆவலாகவுமே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் அரசியல் நிர்ப்பந்தங்களினாலும் இவ்வாறு ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.<br />
<br />
அதிசயமாக சில உண்மையான அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் செயல்படுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மிக அதிகம்..<br />
<br />
இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசு நிர்வாகம்தான், கோடிக்கணக்கான மக்கள் பணத்தை கையாள்கிறது என்பது ஒரு சோகமான உண்மை. <br />
<br />
இவர்களுக்கு எஜமானர்களான நம் நாட்டு அரசியல் தலைவர்களும், இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்லர். "உன்னாலே நான் கெட்டேன் , என்னாலே நீ கெட்டாய்" என்பது அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் பொருந்தும்.<br />
<br />
மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து பொதுமக்களாகிய நம் பணத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். <br />
<br />
நம் ஜனநாயகத்தில் பொதுஜனமாகிய நமக்கு வேறு போக்கிடம் இல்லை. நீதி மன்றங்களில் தீர்ப்புகள் வர ஆண்டுக்கணக்கில் ஆவதும் நம் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கி விடுகிறது.<br />
<br />
இந்த லட்சணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மேலும் மேலும் செலவு செய்து நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைந்துகொண்டே இருக்கிறது.<br />
<br />
ஓட்டைப்பானையில் எவ்வளவு நீர் ஊற்றினாலும் குடிப்பதற்கு நிற்காது. அது போல இந்த ஓட்டை அரசு நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவராமல் புதிய நலத்திட்டங்கள் பலன் தராது.<br />
<br />
முதலில் அரசு தன் நிர்வாகத்தை செம்மைப் படுத்தவேண்டும். அதற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.<br />
<br />
இது சரியாகிவிட்டால் பல விசயங்கள் தானே சரியாகும். அரசு செம்மையாக நடக்கும். மக்களும் சுபிட்சமாக இருப்பர்.. செய்வார்களா??<br />
<br />
<br />
கடவுளே மஹாலிங்கம், இந்த அரசு நிர்வாக குறைபாடுகள் சரியாக நீங்கதான் ஒரு நல்ல வழி செய்யணும்..<br />
<br />
சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கமே போற்றி...<br />
</div><br />
</div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-32311245398869613422011-12-12T17:11:00.000+05:302011-12-12T17:11:29.397+05:30எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்???<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">போன வாரம் இங்கு கொல்கத்தாவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தீப்பிடித்து சுமார் 93 பேர் மரணமடைந்துவிட்டனர். <br />
<br />
இதற்கு முன்பும் கொல்கத்தாவில் இதே போல் சில இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்று பலர் இறந்திருக்கிறார்கள்.<br />
<br />
கொல்கத்தா மட்டுமல்ல, கும்பகோணம் பள்ளி, திருச்சி திருமண மண்டபம், தில்லி தியேட்டர் என்று பல இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்றிருக்கின்றன. <br />
<br />
மனித உயிர்களை மிகவும் துச்சமாக மதித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதே இந்த அனைத்து விபத்துகளுக்கும் மூல காரணம். <br />
<br />
திட்டமிடாத நகர வளர்ச்சி.. குறுகலான இட வசதிகள்.. நெருக்கடியான வசதி குறைவான இடங்கள்.. <br />
<br />
இதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் வெறும் கடிதம் கொடுத்துவிட்டு தம் கடமையை நிறைவேற்றி விட்டதாக ஜம்பமடித்துக் கொள்கின்றனர்.<br />
<br />
மரித்துப்போன மனிதர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் என்ன பதில்?? அரசாங்கம் அறிவிக்கும் சில ஆயிரம் / லட்ச ரூபாய்களால் அந்த இழப்புகளை சரிசெய்ய முடியுமா??<br />
<br />
இதேபோல இன்னும் எத்தனை இடங்கள் தீயில் எரிய காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. <br />
<br />
இந்த பிரச்சினையின் ஆணிவேர் நம் அலட்சியம். தேவையான வசதிகளை செய்வதில் அலட்சியம். செய்பவர்களை கண்காணிப்பவர்களின் அலட்சியம். இந்த சூழலில் இருக்கும் சில லஞ்ச லாவண்யமும் மிக முக்கிய காரணம்..<br />
<br />
இந்த இறப்புகளுக்கு யாருக்கு என்ன தண்டனை தர?? இவர்களையும் அப்படியே எரித்துவிடலாமா?? <br />
<br />
எரிந்த பின் எல்லோரும் அழவும், சிலர் மரிக்கவும் ஒருசிலரின் இந்த அலட்சியம் காரணமாகின்றது.<br />
<br />
எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்து, தேவையான வசதிகளை, சட்டப்படி செய்து, அதிகாரிகளும் நேர்மையுடன் இதை கண்காணித்து, தேவையான நேரத்தில், சரியான நடவடிக்கைகள் எடுத்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.. செய்வார்களா??? காலமும் கடவுளும் தான் பதில் சொல்லணும்..<br />
<br />
சதுரகிரியாரே சரணம்... சுந்தரமஹாலிங்கமே போற்றி...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-81136527115220386612011-12-07T16:37:00.000+05:302011-12-07T16:37:59.487+05:30சமூக அவலங்களும், கர்ம வினைகளும், ஞானிகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">நம் வாழ்வில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கான மூல காரணம் நம் கர்ம வினைகளின்பால் உள்ளது. அதுபோல நம் சமூகத்தில் நிலவும் பலவித பிரச்சினைகளுக்கான காரணமும் இந்த கர்ம வினைகளை சார்ந்தே இருக்க முடியும். பல தனிமனிதர்களின் கர்ம வினைகள்தான் ஒரு சமூகத்தில் பிரதிபலிக்கின்றன. <br />
<br />
கர்ம வினை எனப்படுவது என்ன? இதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும், நான் எளிதில் புரிந்துகொண்டிருக்கும் சில விளக்கங்கள் கீழே <br />
<br />
நாம் செய்யும் நல்ல / கெட்ட செயல்களால் நமக்குள் / அதனால் பாதிப்படைபவருக்குள் உருவாகும் எண்ண அலைகளின் பாதிப்புதான். <br />
<br />
ஒருவித எதிர்பார்ப்போடு செய்யப்படும் / செயல்படும் வினைகளின் விளைவு சிந்தனை மூலம் வெளிப்படும். இந்த சிந்தனைகளின் பாதிப்புதான் கர்ம வினை. <br />
<br />
எந்த ஒரு செயலும் நல்லது அல்லது கெட்டது என்று வகைப்படுத்த நம் சிந்தனையில் அந்த செயல் ஏற்படுத்தும் பாதிப்பே முக்கிய காரணம். ஒரு விசயத்தை நாம் மனதளவில் எடுத்துக்கொள்ளும் / ஏற்றுக்கொள்ளும் விதம்(பக்குவம்)தான், அதனால் நாம் பாதிப்படைகிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்கும். <br />
<br />
பாதிப்படைந்தால் கர்ம வினை நிச்சயம். பாதிப்படையாமல் இருக்க பழகிக்கொள்ளவே பல ஆன்மீக சாதனைகள் உதவுகின்றன.<br />
<br />
<br />
சுருக்கமாக சொன்னால் இந்த கர்ம வினை என்பதும் ஒருவித சக்திதான். எனவே The law of conservation of energy இங்கும் பொருந்தும்.<br />
<br />
The law of conservation of energy states that energy may neither be created nor destroyed. Therefore the sum of all the energies in the system is a constant.<br />
<br />
அதாவது இந்த உலகின் கர்ம வினை என்பது ஒரே நிலையில் இருக்கும். இதை அழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியதாகினும், இதை நிச்சயம் வேறு திசைகளில் திருப்பிவிட முடியும் என்பது புலனாகிறது.<br />
<br />
மனிதர்களுக்கிடையில் இந்த கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றிக் கொள்ளும் வல்லமை நிச்சயம் இருக்கும். அதை சில ஞானிகள் உபயோகப்படுத்தியும் இருக்கிறார்கள். <br />
<br />
இதுபோல் சமூகத்தில் இருக்கும் கர்ம வினைகளை அந்த சக்தி நிலையிலேயே மாற்றும் வல்லமை இருக்கும் ஞானிகள் இருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்கள் இதற்குள் ஏதாவது செய்து சமூக அவலங்களை தடுத்திருப்பார்கள். <br />
<br />
அதனால் அப்படி யாரும் இதுவரை இல்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் விரைவில் உருவாக வேண்டும். அவர்களால் இந்த சமூகத்துக்கும் அதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்.<br />
<br />
கடவுளே மஹாலிங்கம் சிறந்த ஞானிகள் நாட்டில் தோன்றி சமூகத்தின் கர்ம வினைகளை சீர்படுத்தி மக்கள் சுபிட்சமாக வாழ அருள் செய்யுங்க..<br />
<br />
சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-74454512250681225772011-11-29T13:50:00.000+05:302011-11-29T13:50:55.777+05:30வாழ்க்கையும் கனவுகளும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">கனவுகள்.. மூன்று வகை - முதல்வகை இது ஒவ்வொருவருக்கும் இருக்கும் லட்சிய கனவு.. இரண்டாவது வகை நாம் தூங்கும்போது காண்பது.. மூன்றாம் வகை, நம் கற்பனையில் கண்ணை விழித்துக்கொண்டே ஆசைப்படுவது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><u><b>லட்சிய கனவு : </b></u></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அய்யா திரு அப்துல்கலாம் அவர்கள் நம் தேசத்து இளைஞர்களை காணச் சொன்னதுதான் இந்த லட்சிய கனவு. நம் வாழ்வின் லட்சியங்கள் தெளிவாக இருந்தால்தான் வாழ்வின் போக்கும் அது நோக்கி தெளிவாக நகரும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாம் எதுவாக ஆகவேண்டும் என ஆழமாக சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பதால் இந்த லட்சியகனவு ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியத்துவம் பெறுகிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த கனவுகள் ஒவ்வொருவரையும் அதை அடைய தூண்டி செயல்பட வைக்கும். செயல்பட ஆரம்பிப்பதுதான் லட்சியங்களை அடைய முதல்படி. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><u><b>துக்கத்தில் காணும் கனவு :</b></u></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இது நம் மூளை நம் உடல் ஓய்வு எடுக்கும் போது தூக்கத்தில் நமக்கு காண்பிக்கும் ஒரு காட்சி. பல நேரங்களில் நம் உடலில் ஏற்படும் அசதிகளை வெளியேற்ற நம் மூளையில் ஏற்படும் சில ரசாயன நிகழ்வுகளின் விளைவே இந்த கனவு. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிலருக்கு கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை. எல்லோரும் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் தூக்கத்தினுள் சொல்ல முற்படும்போதோ அல்லது தூக்கத்திலிருந்து வெளியேறும் நேரத்திலோ வரும் கனவுகள்தான் பெரும்பாலும் நம் ஞாபகத்தில் இருக்கும் என கூறுகிறார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிலருக்கு கனவுகளில் எதிர்காலத்தில் நடக்கப் போவது பற்றிய விசயங்கள் வருவதுண்டு. சிலருக்கு கனவுகள் வழிகாட்டியாக செயல்படுவதும் உண்டு. நம் மூளையின் சில அற்புதங்களில் இதுவும் ஒன்று. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கனவுகளுக்கு பலன்கள் சொல்கிறார்கள். எவ்வளவு தூரம் அவற்றை நம்ப முடியும் என்பது சர்ச்சைக்குரியதுதான். சும்மா ஒரு சுவாராசியத்துக்காக அது பற்றியும் நேரம் கிடைக்கும்போது படித்து பார்த்துக்கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிலர் கனவுகளைப் பற்றி பயம் கொண்டிருப்பார்கள். அந்த பயமே அவர்களை பல நேரங்களில் பிரச்சினைகளில் மாட்டி விடும். எனவே கனவுகளை நினைத்து பயப்படாமல் அதையும் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><u><i><b>பகல் கனவு :</b></i></u></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதாவது விழித்திருக்கும்போதே நம் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு யோசித்துக் கொண்டே இருப்பது. இதனால் நம் உடலிலும் மனதிலும் பலவித மாற்றங்கள் ஏற்படும். இவை பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் நம் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி நம்மை கற்பனை உலகில் முடக்கி விடும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உண்மையில் மிகவும் ஆபத்தானது இந்த பகல் கனவு. இதனால் பெரிய பலன் ஏதும் இல்லை. மற்றபடி இது கால விரயமே. இந்த மாதிரி கற்பனையில் மனதை அலைபாய விடாமல் நிதர்சனத்தை நேரில் சந்தித்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வது அனைவருக்கும் சிறப்பு. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>கடவுளே மஹாலிங்கம், எல்லோரும் பகல் கனவு காண்பதை விடுத்து, சிறந்த லட்சியங்களை உருவாக்கி அது நோக்கி பயணம் செய்ய தூக்கத்தில் கூட வழி ஏற்பட அருள் செய்யுங்க..</i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><div style="text-align: justify;"><i>சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..</i></div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-57902959738852345792011-11-21T16:33:00.000+05:302011-11-21T16:33:21.045+05:30விண்ணைத்தாண்டி ஓடும் விலைவாசி...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயரும் போதும் மற்ற சில பொருட்களின் விலையும் அதிகரித்து வந்திருக்கிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பெட்ரோல் விலையை நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு தற்காலிகமாக குறைத்தாலும் இவ்வாறுஉயர்ந்த மற்ற எந்த விலைவாசியும் குறையவில்லை. பெட்ரோல் விலை மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் உயர்த்தப்படும் போது மற்ற பொருள்களும் மீண்டும் விலை ஏற்றப்படும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்போது தமிழகத்தில் பால், பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டு மின் கட்டணமும் உயர்த்தப்பட இருக்கிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால் இந்த கட்டணங்கள் மற்ற மாநிலங்களில் இன்னும் அதிகம். முக்கியமாக மின் கட்டணம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் ஓசூரில் இருக்கும் போது (2009) மின்கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 300-00 மட்டுமே கட்டி இருக்கிறேன். ஆனால் இங்கு கல்கத்தாவில் (2011) 3 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ 1600-00 கட்ட வேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் நான் ஓசூரில் உபயோகித்த ஹீட்டரை இப்போது இங்கு உபயோகப் படுத்துவதில்லை. இந்த மின் கட்டணம் விரைவில் இங்கு உயர்த்தப்பட உள்ளது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலும் பேருந்து கட்டணங்கள், தமிழகத்தில் ரூ 2-00 குறைந்த பட்ச கட்டணம், ஆனால் இங்கு கல்கத்தாவில் ரூ 4-00 குறைந்த பட்ச கட்டணம். ஆனால் இங்கு இருக்கும் பெரும்பாலான பேருந்துகளில் பயணம் செய்தால் முதுகு வலி நிச்சயம். அவ்வளவு மோசமாக இருக்கும். உண்மையில், இதோடு ஒப்பிடும்போது தமிழகத்துக்கு வரும்போது நான் ஒரு சுகமான பேருந்துப் பயணத்தையே கண்டிருக்கிறேன். இந்த பேருந்துக் கட்டணம் இங்கு பல ஆண்டுகளாக நடைமுறையில் உளளது. எப்போது வேண்டுமானாலும் உயர்த்தபடலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பால் விலை இங்கு அரை லிட்டர் ரூ 11-50 (அரசு விலை). ஆனால் தனியார் பால் (அமுல்) அரை லிட்டர் ரூ15-00. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தானிய வகைகளும் காய்கறிகளின் விலையும் மிகவும் அதிகம். எனது மாத பட்ஜெட்டில் எனது வாடகைக்கு இணையாக இவற்றுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நடுத்தர வர்க்கமான நாமே இவ்வளவு செலவு செய்ய யோசிக்கும்போது தினம் ரூ32 ம் அதற்கும் கீழும் சம்பாதிக்கும் ஏழைகளை நினைக்க இன்னும் வருத்தமாக இருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை நம் ஜனத்தொகையில் சுமார் 40% என்று அரசாங்கமே சொல்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அரசாங்கம் விலைவாசிகளை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் தெரிகிறது. கொள்ளை சம்பவங்களும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இப்போது அதிகரித்து வருகிறது. மக்கள் வருமானத்திற்கு மீறிய செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே அரசு உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண முயல வேண்டும்.</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் இதை செய்யாமல் இவர்கள் ஏதோ நம்பர் கேம் ஆடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இது பற்றிய எனது முந்தைய ஒரு பதிவு :</div><div style="text-align: justify;"><br />
</div><h3 class="post-title entry-title"><a href="http://anubhudhi.blogspot.com/2011/01/blog-post_9962.html">விலைவாசி உயர்வும், அதற்கு தீர்வும் (?)</a></h3><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>நாட்டு ஜனங்களை அந்த மஹாலிங்கம்தான் ரட்சிக்கணும்.</i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><div style="text-align: justify;"><i>சதுரகிரி நாதனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..</i></div><div style="text-align: justify;"><br />
</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-78806989588926664872011-11-17T15:57:00.000+05:302011-11-17T15:57:58.322+05:30என் கனவில் கடவுள்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">அது 1993ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 1ம் தேதி. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மிகுந்த மன வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் நான் வாழ்வின் நம்பிக்கையை முழுமையாக் இழந்திருந்த நேரம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக துரத்த வாழ்வில் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நேரம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எண்ணங்கள் தட தட என தவறாக ஓட ஆரம்பிக்க என்ன செய்வது என்ற நிலை தடுமாறி ஒரு மயக்கத்தில் தூங்காமல் விழித்திருந்த நேரம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வாழ்வின் நமக்கு தெரிந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு பெரும் பாரமான உணர்வு மனதில் அழுந்த கண்களில் நீர் பூக்க திக்கு தெரியாமல் திணறிய நேரம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சாய்ந்து அழ தோள் கூட இல்லாமல் தனிமையில் மருகி நின்றிருந்த நேரம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இரவின் இருட்டு பேயாய் அழுத்த, கண்ணீரில் தலையணை நனைந்து தூக்கம் தொலைந்த நேரம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அசதியிலும் ஆற்றாமையிலும் லேசாக கண்ணயர, கனவு விரிகிறது :</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>ஒரு ரயிலடி. யாரையோ ரயில் ஏற்றிவிட வந்திருக்கிறேன். திடீரென்று எல்லோரும் எங்கோ ஓடுகிறார்கள். தோள்களில் பைகளுடன் நானும் அவர்களுடன் ஓடுகிறேன். </i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>ஒரு சிறு மண்டபம் போன்ற ஒரு கட்டிடத்துக்குள் ஈ நுழைய முடியாத அளவு கூட்டம். உள்ளே ஒன்றும் தெரியவில்லை. நான் வெளியில். ஓ!! ஏதோ கோயில் போல இருக்கிறது. அதுதான் கூட்டமாக இருக்கிறதே என ஒரு அசட்டையுடன் திரும்ப எத்தனிக்கையில், </i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>கோவில் மணி ஒலி கணீரென்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. திரும்பிப்பார்க்கிறேன். முன்னால் நின்றிருந்த அனைவரும் ஒருசேர விழுந்து வணங்குகிறார்கள். பின்னால் நிற்கும் எனக்கு அந்த ஆண்டவனின் தரிசனம்.</i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><div style="text-align: justify;"><i>கண்கள் பனிக்க, கைகள் துவள, பைகள் விடுபட, கண்ணீரோடு வணங்குகிறேன். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிய அவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்.</i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">திடீரென்று கனவில் இருந்து விழித்து எழுகிறேன். வியர்த்திருக்கிறது. கண்ணீரால் கன்னம் நனைந்திருக்கிறது. விடிகாலை 4 மணி. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதன் பிறகு தூக்கம் வரவில்லை. இந்த கனவின் நினைவோடு புரண்டு புரண்டு படுக்கிறேன். ஒரே சிந்தனை. இதற்கு என்ன அர்த்தம். அல்லது அனர்த்தமா? கடவுளைப்பற்றி நேற்று ஒரு விநாடி கூட நினைக்க வில்லையே. பிறகு எப்படி இப்படி ஒரு கனவு வரும். ஆழ்ந்த யோசனை..</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சில மாதங்களுக்கு முன் கடவுளிடம் விட்ட சவால் ஞாபகம் வந்தது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">”நீ வந்து என்னைப்பார்க்காமல் உன்னை வந்து நான் ஏன் பார்க்கவேண்டும்??”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஓ இதனால்தான் கடவுள் என்னை பார்க்க வந்தாரா?? யாருமே எனக்கு இல்லை என்ற எண்ணத்தைப் போக்க வந்தாரோ?? ஒன்றும் புரியவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் மனதில் ஒரு புதிய நம்பிக்கை கீற்று ஒளிவீச ஆரம்பித்திருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மாற்றம் ஆழ் மனதில். ஏதோ நல்லது நடக்கும் என்ற ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“கடவுள் நிச்சயம் நமக்கு துணை இருப்பார்”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்த நம்பிக்கையோடு முதல் முறையாக கடவுளைக் காண்பதற்காக கோயிலை நோக்கி பயணப்பட்டேன்...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">- இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். மீண்டும் இன்று கார்த்திகை 1ம் தேதி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எனக்கு அடைக்கலம் கொடுத்த மஹாலிங்கத்துக்கு வணக்கம். உலகமக்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து காப்பாற வேண்டுகிறேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்..</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-50870058561122890972011-11-15T17:27:00.000+05:302011-11-15T17:27:12.507+05:30லஞ்சத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">இன்றைய சூழலில் லஞ்சம் என்பது பரவலாக காணப்படுகிறது. பிறப்பு / இறப்பு சான்றிதழ் வாங்க, ரேஷன் அட்டை வாங்க / மாற்ற, சாதி சான்றிதழ் வாங்க, சில அரசு அனுமதிகள் வாங்க, மற்றும் பல சந்தர்ப்பங்களில் லஞ்சம் என்பது நீக்கமற நிறைந்துவிட்டது. சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் இடைத்தரகர்கள் மூலமும் இது வாங்கப்படுகிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">லஞ்சமே கொடுக்காமல் ஒரு மனிதன் நம் தேசத்தில் வாழ முடிந்தால் உண்மையில் அவர் ஒரு மிகப்பெரிய லட்சியவாதிதான். ஆனால் இதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை நினைத்து என்னைப் போன்ற பலருக்கு பயமாக இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">லஞ்சம் எப்போதெல்லாம் கொடுக்கப்படுகிறது ?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">1) தங்களுக்கு நேர்மையாக ஆகவேண்டிய காரியம் தாமதமில்லாமல் குறித்த நேரத்தில் ஆவதற்கு</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2) அதே காரியம் குறித்த நேரத்துக்கு முன்பாகவே சற்று விரைவாக ஆவதற்கு </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">3) சட்ட விரோதமாக சில காரியங்கள் செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">4) சில அதிகாரிகளின் பேராசையால அலைக்களிக்கப்படாமல் இருப்பதற்கு அல்லது அலைக்களிக்கப்பட்டு லஞ்சம் தர தூண்டுவது </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவற்றில் 2 வது காரணத்துக்கு லஞ்சம் கொடுப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் / தனி மனிதர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு காரியம் ஆகிவிடாதா என்ற நப்பாசையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நான் பார்த்தவரை, 4 வது காரணம்தான் லஞ்சம் வாங்கும் உத்தியாக பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. காரியம் ஆவதற்காக பலரை ”இன்றுபோய் நாளை வா” பாணியில் அலைக்களிப்பது சர்வ சாதாரணமாக நமது அரசு அலுவலங்களில் நடைபெறுகிறது. மேலும் பொறுப்பாக பதில் சொல்லும் அதிகாரிகளும் மிகக் குறைவே.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த நிலையில் போராட மனமும் நேரமும் இல்லாத பலர் லஞ்சம் கொடுத்துதான் இன்றும் காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் (கொண்டிருக்கிறோம்). </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவ்வாறு லஞ்சம் கொடுப்பதும் குற்றமே எனினும் கொடுக்காமல் கஷ்டப்படுவதைவிட கொடுத்து சற்று நிம்மதியாக இருக்கலாமே என்ற எண்ணம்தான் காரணம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த சூழ்நிலையில் நேற்றைய செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி - இந்த லஞ்சத்தை சட்டப்பூர்வமாக ஆக்கிவிடவேண்டும் என்ற வேண்டுகொள் நம் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வந்திருக்கிறது. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்கபோல இருக்கு. அதன் சுட்டி கீழே :</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><a href="http://timesofindia.indiatimes.com/business/india-business/Payment-of-Rs-5-10k-speed-money-can-be-legitimised/articleshow/10720005.cms"><span id="advenueINTEXT" name="advenueINTEXT"><span class="arttle"></span></span></a></div><h1><a href="http://timesofindia.indiatimes.com/business/india-business/Payment-of-Rs-5-10k-speed-money-can-be-legitimised/articleshow/10720005.cms">'Payment of Rs 5-10k speed money can be legitimised'</a></h1><br />
<div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பொதுஜனமாகிய நாம் கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத நம் அரசு இவர்கள் சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் இந்த விசயத்தில் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கினால் இதற்கு மேலும் யார் லஞ்சம் தருவார்கள் என்றுதான் பெரும்பாலான அதிகாரிகள் அலைவார்கள். எனவே நம் அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரிக்கத்தான் செய்ய வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் நம் நாடு ஜனநாயக நாடு . என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும். என்ன நடந்தாலும் நாம்தான் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சங்குதான். போன <i><a href="http://anubhudhi.blogspot.com/2011/11/blog-post_10.html">பதிவு</a></i> அந்த சங்கொலியின் ஒரு எதிரொலிதான். எல்லாம் விதி..</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>கடவுளே மஹாலிங்கம், இந்த லஞ்சம் இல்லாமல் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஏதாவது செஞ்சு அதை ஒழிச்சுக் கட்ட உங்களாலதான் முடியும். தயவு செய்து மனசு வையுங்க.</i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><i>சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...</i></div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-77017783256424115002011-11-10T10:38:00.000+05:302011-11-10T10:38:38.485+05:30கூடங்குளமும் -அரசாங்கத்தின் செய்தியும்....(கற்பனை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">இன்றைய நாட்டு நடப்புகளைப் பார்க்கும்போது, முக்கியமாக கூடங்குளம் அணு உலை சம்பந்தமான செய்திகளைப்படிக்கும் போது எனக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி எழுதிய <a href="http://anubhudhi.blogspot.com/2011/08/blog-post_16.html">”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி”</a> என்ற பதிவு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என தெரிகிறது.. அதை மீண்டும் மீள் பதிவு செய்கிறேன்.</div><br />
<u>”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி” (கற்பனை)</u><br />
<br />
<br />
<div style="text-align: justify;">என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும். திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.</i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><div style="text-align: justify;"><i>சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!</i></div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-85655943060263610942011-11-09T16:52:00.002+05:302011-11-09T16:52:42.964+05:30நல்லவன், கெட்டவன்... ஒருவரே !!!!!! ????<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">சில நாட்களுக்கு முன் என் மகன் சுட்டி டிவியில் ஜாக்கிசான் கார்டூன் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் ஒரு (புலி) மந்திரக்கல்லின் உதவியால் ஜாக்கி இரண்டு நபராக ஆவதாக காண்பித்தார்கள். ஒருவன் ரொம்ப நல்லவன். இன்னொருவன் ரொம்ப கெட்டவன். அதில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இவ்வாறு இரண்டு நபர்கள் இருப்பதாக ஒரு விளக்கமும் கொடுத்தார் அங்கிள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இது குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொழுது , ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.<br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் சில இக்கட்டான சூழல்களில் இந்த மாதிரி நமக்கு உள்ளே இருக்கும் இந்த இரண்டு நபர்களை (நல்லவன், கெட்டவன்) ஸ்பஷ்டமாக சந்திக்க முடியும். நாம் எடுக்கும் சில முடிவுகளால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசும் போது இது நமக்கு புலப்படும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அல்லது நம் சிந்தனை தவறாகப் போகிறதே என்று எப்போதாவது நமக்கு புலப்படும்போது இந்த கெட்டவன் தான் அங்கே வேலை செய்திருக்கிறான்.<br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த கெட்டவன் நமக்குள்ளேயே இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் அவனுடைய சிந்தனைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நாம் எத்தனிக்கும்போதுதான் நாம் யாரென்ற உண்மையான பிம்பம் வெளிப்படும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">விஷத்தை பாட்டிலிலேயே வைத்திருக்கும்வரை அது சாதுதான். ஆனால் எடுத்து சாப்பிட்டுவிட்டால் ??? யோசித்துப் பாருங்கள்.<br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த இருவரில் நம் வாழ்நாளில் அதிகம் யாரை நாம் வெளி செலுத்துகிறோமோ அவராகவே நாம் அறியப்படுகிறோம். இந்த ”யாரை வெளிப் படுத்துவது?” என்ற உரிமை இயற்கையால் / கடவுளால் நமக்கு வழங்கப்பட்டு இருக்கிறது (Free-Will). அதை நாம் சரியாக உபயோகப்படுத்துவது ”நமது கை”யில்தான் இருக்கிறது.<br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த ”நமது கை” என்பது நம் அகங்காரத்தையும் நம் வாழ்வியல் சூழலையும் சார்ந்து இருக்கிறது. இந்த இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஏனெனில் நம் வாழ்வியல் சூழல்கள் நம் அகங்காரத்தை தீமானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நம் அகங்காரத்தை தீர்மானிப்பதில் இன்னொரு முக்கிய பங்கு நம் ஜீன்களில் இருக்கிறது. இதைத்தான் முன் ஜென்ம வினை / கர்மா எனவும் சொல்கிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதாவது, கருப்பு வெள்ளை பிலிம் உபயோகப் படுத்தி எடுத்த புகைப்படம் கருப்பு வெள்ளையில்தான் வரும். கலர்பிலிம் உபயோகப்படுத்தினால் கலர்படம் எடுக்கலாம். அதுபோல X-Ray பிலிம் உபயோகப்படுத்தி படம் எடுத்தால் அதில் நம் எலும்புகள்தான் தெரியும். பிலிம் என்ற ஒரே மீடியத்தில் இத்தனை ரகங்கள் இருக்கும்போது மனிதர்களில் எத்தனை ரகமோ??</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">”உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை</div><div style="text-align: justify;">கள்ளத்தால் கள்வேம் எனல்”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எனக்கு மிகவும் பிடித்த இந்த குறள் ஒரு மனிதனின் ஆத்ம சுத்தியின் ஆழத்தைப் பற்றிப் பேசுகிறது. இதன்படி வாழ்வதே ஒரு லட்சிய வாழ்க்கை. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">யோசித்துப் பாருங்கள். நமக்குள் இருக்கும் அந்த கெட்டவனை நாம் அழித்துவிட்டால்??? அப்போதுதான் இந்த நிலை சித்திக்கும். <br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><u>ஒவ்வொரு மனிதனும் நமக்குள் இருக்கும் கெட்டவனை அழிக்கமுடியுமா தெரியவில்லை . ஆனால் இப்படி ஒருவன் நமக்குள் இருக்கிறான் அவனை நாம் ஜாக்கிரதையாக கையாளவேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நாம் செயல்படத் தொடங்கினால் வாழ்வு இனிக்கும்.</u></div><div style="text-align: justify;"><br />
</div><br />
<br />
<div style="text-align: justify;"><i>கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் அந்த கெட்டவனை நீங்கதான் அழிக்கணும்..</i></div><div style="text-align: justify;"><i><br />
</i></div><i>சதுரகிரி சுந்தரனே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..</i></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-54849107961243683632011-10-31T12:43:00.000+05:302011-10-31T12:43:36.815+05:30உலக மக்கள்தொகை - 700 கோடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">இன்று 31-10-2011 உலகின் மக்கள்தொகை 700 கோடி ஆக ஆனது. செய்தி சுட்டி கீழே :</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><h1 style="text-align: justify;"><a href="http://ibnlive.in.com/news/worlds-seven-billionth-baby-born-in-up/197801-3.html">World's seven billionth baby born in UP?</a></h1><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">இதில் இந்தியா மற்றும் சீனா வில் மட்டுமே உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அதுவும் இந்த இரண்டு நாடுகளில் மக்கள்தொகை அடர்த்தியில் நமது இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 140 மக்கள் வாழ்கிறார்கள், அதுவே இந்தியாவில் 368 பேர் வாழ்கிறார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதிக மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் இருக்கும் நம் இந்தியாவின் சவால்கள் மிக அதிகம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">1) அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் - உணவு, உடை, இருப்பிடம்..</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2) அனைவருக்கும் சிறந்த கல்வி, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">3) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">4) சிறந்த நேர்மையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவற்றை நாம் ஓரளவுக்கு செய்து வந்தாலும், இன்னும் விரைவான வேகத்தில் இவற்றை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதற்கு தடையாக இருக்கும் காரணிகளை அகற்றி விரைவில் நாம் நம் தேவைகளில் தன்னிறைவு அடைய இந்த முக்கியமான தருணத்தில் வேண்டிக்கொள்வோம்..</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...</div></div><div class="blogger-post-footer">http://anubhudhi.blogspot.com/</div>Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com5