Showing posts with label டீசல். Show all posts
Showing posts with label டீசல். Show all posts

Monday, June 27, 2011

மிரட்டும் விலைவாசி உயர்வு...

போனவாரம் நம் அரசு, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை கணிசமாக உயர்த்தியது.  இதன் விளைவாக அனைத்து பொருள்களின் விலையும் 20 முதல் 30 சதம் வரை குறைந்த பட்சமாக உயரும். வீட்டு வாடகை,  ஆட்டோ கட்டணம், பஸ் கட்டணம், ரயில் கட்டணம் அனைத்தும் உயர்த்தப்படும். இவ்வாறு ஏறும் விலைவாசிகளுக்குத் தகுந்தாற்போல் நம் வருமானம் உயர்வதில்லை. இதனால் இவற்றின் பொருளாதார தாக்கம் நம் நடுத்தர குடும்பங்களில் மிக பயங்கரமாக எதிரொலிக்க ஆரம்பிக்கிறது.

நான் சென்னையில் திருமணமான புதிதில் (2005)  வீடு பார்த்து குடி போன பொழுது வாடகை ரூ 3500-00. அதே வீட்டில் இப்போது (2011) இருக்கும் எனது தாயாரும் சகோதரரும் ரூ15000-00 தருகின்றனர். இதற்கு ரூ 25000-00 கொடுத்து குடிவர பலர் தயாராக இருக்கின்றனர்.  இது கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட விபரீத வளர்ச்சி.  (ஏதோ, ஹவுஸ் ஓனர் நல்ல விதமானவர் என்பதால் இன்னும் எங்களை காலி பண்ண சொல்லி தொந்தரவு செய்வதில்லை.)

முன்பு என் வருமானத்தில் 5ல் ஒரு பங்கு வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்று என் சகோதரர் தன்  வருமானத்தில் முக்கால் பகுதியை வாடகைக்கே கொடுக்கும் நிலை இருக்கிறது.

இது வெறும் வாடகை மட்டுமே.. மற்ற செலவுகளும் வருமானத்திற்கு சம்பந்தம் இல்லாமல் கிடு கிடு என உயர்ந்து நிற்கின்றன. நடுத்தர மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

என்ன செய்வது??? ஒன்றும் புரியவில்லை... சிக்கனமாக இருக்கும் நிலை மாற்றி நாம் கஞ்சத்தனமாக இருந்தால் கூட நிலைமையை சமாளிக்க முடியாது போல இருக்கிறது.

அரசாங்கம் தான் ஏதாவது செய்யணும். என்ன பண்றது அவங்களுக்கு ஊழலை ஒளிக்கவும், அதைப் பற்றி பேசரவங்களை அடக்கவும், மேலும் யாரும் அதப்பத்தி பேசாம இருக்க விலைவாசியை உயர்த்தி அவர்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பதிலும் பிசியாக இருக்கிறார்கள்.

கேவலம். இது ஜனநாயக ஆட்சி என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது. இங்கு மோசடி அரசியல் தொழில் செய்யும் அனைவரும் வெட்கி வேதனைப்பட வேண்டிய சூழல் வரணும். அப்பதான் இதுக்கு ஏதாவது ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

இதுல மனுசன நம்பி பிரயோசனமே இல்லைங்கற பாடத்தை இந்த அரசியல் வாதிகள் சொல்லிக் கொடுத்திட்டாங்க. கடவுள்தான் காப்பாத்தணும்.

கடவுளே மஹாலிங்கம், எங்களையும் நாட்டு மக்களையும் நீங்கதான் காப்பாத்தணும்.

சதுரகிரியாரே சரணம். சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!