Showing posts with label பிரார்த்தனைகள். Show all posts
Showing posts with label பிரார்த்தனைகள். Show all posts

Monday, July 4, 2011

பிரார்த்தனைகள் - 2

நாம் அடையும் எல்லா விஷயங்களும் கடவுளிடம் இருந்து நமக்கு வருபவை என்றாலும், சில விஷயங்கள் கடவுளால் மட்டுமே தர முடியும் என்ற நிலையில் இருப்பவை... அவை பற்றி...


1) நல்ல உடல், மன ஆரோக்கியம்

2) சுயநலமில்லா பந்து மித்திரர்கள், சுற்றத்தார்கள்

3) சத் சங்கம், சத் சிந்தனை

4) நல்ல மனைவி, மக்கள்

5) தேச, உலக நலன்

6) மன நிம்மதி, ஆனந்தம், மன அமைதி

7) ஞானம்


இவை அனைத்தும் இறைவன் மட்டுமே தர முடியும். மேலும் நமது, ”இந்த உலகில் எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்ற பிரார்த்தனைகளின் முடிவு மேற்கண்ட ஏதாவது ஒன்றில் வந்து தான் நிற்கும்.

எனவே பொதுவாக இவற்றை பிரார்த்தனை செய்தாலே இறைவன் நமக்கு இந்த உலகில் இவற்றை அடைய தேவையானவற்றை உடனடியாக அளிப்பான் என்பதில் சந்தேகமில்லை.

குறைந்த பட்சம், மன நிம்மதியும் ஞானமும் நமக்கு வாய்த்தால் வேறு எதுவும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை.

இதில் ஞானம் கை கூடினால் நிம்மதி தானாக கிடைக்கும்.  எனவே ஞானம் வேண்டி பிரார்த்திப்போம். ஒரு நிம்மதியான சமுதாயம் படைப்போம்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லாருக்கும் மன நிம்மதியும் ஞானமும் கைகூட அருள் செய்யுங்கள்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....

Thursday, June 30, 2011

பிரார்த்தனைகள் - 1

நான் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது கடவுளிடம் விழுந்து விழுந்து பிரார்த்தனை செய்வேன்.  கேட்காத சமாசாரமே இல்லைங்கர அளவுக்கு இருக்கும் என் பிரார்த்தனைகள். எனக்கு தேவையான சில விசயங்கள் பலிச்சது.

என்னைப் பார்த்து என் நண்பனும் என்னைப் போலவே பிரார்த்தனை செய்தான். ஆனால் சில நாட்களில் ஒன்னும் வேலைக்காகவில்லை என்று விட்டு விட்டான்.

தினமும் கடவுளிடம் எவ்வளவோ பிரார்த்தனைகள் செய்கிறோம். அது எல்லோருக்கும் ஒரே மாதிரி பலிப்பதில்லை. இதன் காரணம் என்ன என சிந்தித்த போது எழுந்த சிந்தனைகள்.

1) முதலில், நம் மனதுக்கு நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு இருக்கிறது. முதலில் நாம் நம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று ஆழ்மனதில் நம்பவேண்டும்.

சிலர் நம்பிக்கை இல்லாததுபோல பேசினாலும் ஆழ் மனதில் பெரும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். இது ஆழ்மனதுக்கு நம்பிக்கை யூட்ட செய்யப்படும் யுக்தியாகயும் கைகொள்வார்கள்.

வேண்டுதல்கள் வைப்பதும் நம் மனதின் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள செய்யும் ஒரு யுக்தியே.

2) பிரார்த்தனைகளில் இரு விதம் இருக்கிறது. ஒன்று தேவைக்கான பிரார்த்தனைகள். மற்றொன்றும் நம் ஆசைக்கான பிரார்த்தனைகள். 

பெரும்பாலும் நம் வாழ்வின் தேவைக்கான பிரார்த்தனைகள் நாம் கேட்ட அளவுக்கு இல்லாவிட்டாலும் நமக்கு தேவையான அளவுக்கு நிறைவேறிவிடும். ஆசை / பேராசைக்கான பிரார்த்தனைகள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்படும். அல்லது நிறைவேறாமலே போகி விடும். இது கடவுளிடம் தவறு இல்லை. நம் பிரார்த்தனையில்தான் தவறு இருக்கிறது.

3) ஒருமுறை ஒரு நாத்திக நண்பர் என்னிடம் வந்து, ”இப்பிடி விழுந்து விழுந்து பிரார்த்தனை பண்றியே அது கடவுளுக்கு புரியுமா? அவர்தான் கடவுளாச்சே அவருக்கு உனக்கு தேவையானது என்னன்னு தெரியாதா? அவர்கிட்ட நீ கேட்டுத்தான் அதை உனக்கு அவர் குடுக்கணுமா? கேக்காட்டி தர மாட்டாரா?” இப்பிடி சராமாரியா கேள்விகளை அடுக்கி என்னை சிந்திக்க வைத்தார்.

சிந்தனை முடிவில் அவருக்கு அளித்த பதில் :

”நமது பிரார்த்தனைகள் கடவுளிடம் சொல்லப்படும் போது எந்த மொழியில் சொன்னாலும் அவருக்கு புரியும். ஏன்னா கடவுள் நமக்கு உள்ளயும் இருக்கிறார். நமக்கு புரிந்த பிரார்த்தனை அவருக்கும் நிச்சயம் புரியும்.

கடவுளுக்கு நம் தேவைகள் என்னன்னு தெரிஞ்சாலும் அதை அவர் குடுக்கரவரை பொறுமை இல்லாத நாம் நமக்கான தேவைகளை அவரிடம் கேட்கிறோம்.

நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நமக்கு தரவேண்டிதை தரவேண்டிய நேரத்தில் நிச்சயம் கடவுள் தருவார்.”


நமக்கு தேவை -  கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை.. அது இருந்தால் எப்படிப்பட்ட பிரார்த்தனையும் நிச்சயம் நிறைவேறும்...


கடவுளே...மஹாலிங்கம்.. அப்பிடிப்பட்ட ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் எல்லாருக்கும் கிடைக்க நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி... சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்...