Monday, January 3, 2011

நமது கல்விமுறை - ஒரு கனவு...

நமது தற்போதய கல்வி முறை, மனப்பாடம் செய்து அப்படியே எழுத வைப்பதை ஊக்குவிக்கும்விதமாக இருக்கிறது. இது சரியா?

ஒருவகையில் இது பணம் சம்பாதிக்கும் எளியவழியாம் ஒரு கம்பனியில் வேலை செய்து நமது சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் தகுதியை ஏற்படுத்தமட்டுமே உதவி செய்கிறது. மற்றபடி சுயசிந்தனை, சுயசார்பு, சமூகப்பொறுப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அரசியல் சிந்தனை இவைகளை வளர்த்துக்கொள்ள இந்தக்கல்விமுறை உபயோகப்படவில்லை. நான், எனது, பணம் சம்பாதிதல் ஆகியவையே பிரதானமான நோக்கமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யவேண்டும்.

பெற்றோர் பொறுப்பு :

இன்றைய பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, தன்னால் செய்ய முடியாது விடுபட்ட பொருளாதார, புகழ் தாகத்தை தீர்க்கும் ஒரு கருவியாகவே நினைக்கிறார்கள். இன்றைய மீடியாக்களும் இதற்கு தூபம் போடும் விதமாகவே செயல்படுகின்றன.

அவ்வாறு பணம், புகழ் பெறும் குழந்தைகளுடன், தங்களின் குழந்தைகளை ஒப்பீடு செய்து அவர்களையும் அதுபோல நடக்கத்தூண்டுகிறார்கள். இவ்வாறு குழந்தைகளை நெறுக்கி, பின் அவர்களை நொறுக்கிவிடுகிறார்கள்.

நமது மதிப்பெண் சார்ந்த படிப்புகள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் விதமாகவே இருக்கிறது.

1) குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை செய்தல், தன்னைப்போல பிறரையும் கருதும் தன்மை, பிறருக்கு விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை, தைரியம், துணிச்சல்...
2) மதிப்பெண்மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தவேண்டும்.
3) குழந்தைகளின் தனித்திறன் மற்றும் தனி ஆர்வம் உடைய துறைகளில் அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
4) நமது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.
5) நமது கலாச்சார மதிப்புகளைக் கற்றுத்தர வேண்டும்.
6) பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யாமல் இருக்கவேண்டும்.

கல்விக்கூடங்களின் பணி :

இன்றைய பெரும்பான்மையான கல்விக்கூடங்கள் பணம் பண்ணும் கருவிகளாக இருக்கின்றன. கல்வி என்பது வியாபரமாகிப்போனது.

1) கல்விக்கூடங்கள் குருகுலமாகவும், ஆசிரியர்கள் குருவாகவும் இருந்தநிலை மீண்டும் ஏற்படவேண்டும்.

2) அனைத்துக் கல்விக்கூடங்களையும் அரசே ஏற்று நடத்தவேண்டும்.

3) குழந்தைகளுக்கு விளையாட்டுமுறையில் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். வாழ்வியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். நமது தேசிய வரலாறும், தலைவர்களின் தியாகமும் போதிக்கப்படவேண்டும். நமது கலாச்சார பாரம்பரிய வரலாறு கட்டாயமாக்கப் போதிக்கப்படவேண்டும்.

4) அனைத்து பள்ளிகளில் சட்டமன்றம்போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.

5) குழந்தைகளும், ஆசிரியர்களும் அவர்களின் பகுதிகளின் குறைகளைத் தொகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கவேண்டும்.

6) தமது பகுதிகளில் நடக்கும் அரசு வேலைகளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

7) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த பள்ளி சட்டமன்றங்கள் கூடி விவாதிக்கவேண்டும். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தனது அதிகாரிகளுடன் இதில் கலந்துகொள்ளவேண்டும். அவர் கலந்துகொள்ளமுடியாத பட்சத்தில், அவரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகளைக் களைய ஏற்பாடு செய்யவேண்டும்.

8) இந்த சமூகப்பொறுப்பில் ஆவலுடன் பங்குபெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது, ஒரு நல்ல தலைவன் உருவாக ஒரு வாய்ப்பு இளம் பருவத்திலேயே ஏற்படும்.


எழுதிப்படிக்கிரப்ப நல்லாத்தான் இருக்கு... நடைமுறையில்.... நம்ம அரசியல்வாதிகள் தன் வாரிசுகளைத்தவிர மற்றவர்கள் வளர்வதை மட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

என்ன செய்வது, சிந்திக்கவாது செய்கிறேன்... என்னிக்காவது இந்தக்கனவு நனவாகலாம்... அந்த மஹாலிங்கத்துகிட்ட வேண்டிக்கிறேன்.

ஹர ஹர மஹாதேவா போற்றி....

2 comments:

குடிமகன் said...

உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துகள்!!

மானுடம் செழிக்கட்டும்!!

Sankar Gurusamy said...

திரு குடிமகன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...