ஒரு வழியாக திரு அன்னா ஹசாரே தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். இந்த போராட்டத்தினால் ஊழல் ஒழிப்புக்கு ஒரு புது சட்டம் வரப்போகின்றது. இந்த விசயத்தைத் தவிர இதனால் மேலும் சில நன்மைகளும் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது... அது பற்றி....
1) முதலில் ஜனநாயகத்தை விட்டு, ஓட்டுகூட போடாமல் விலகி இருந்த இளைய சமுதாயத்தினரின் ஒரு பகுதியினரை வீதிக்கு வரவழைத்தது...
2) ஜனநாயகத்தில் இனி இளைய சமூகமும் ஓரளவுக்கு பங்குபெறும் என்ற நம்பிக்கையை என்போன்ற சில சமூக கவலை இருப்போரிடம் ஏற்படுத்தியது.
3) நம் குரலுக்கும் நம் ஜனநாயகத்தில் இனி மதிப்பிருக்கும் என்ற ஒரு கருத்தை இளைய தலைமுறைக்கு கொடுத்தது...
4) போராட்டம் என்றால் ஏதோ பெரிய தியாகம் என்ற மனப்பான்மையை மாற்றி, ஓய்வு நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் போனாலே நம் எதிர்ப்பை காட்டும் போராட்டமாக்கலாம் என் ஒரு புது வழியைக் காட்டியது.
5) ஒரு கார்பரேட் ஈவண்ட் போன்ற போராட்டங்களும் நடத்த முடியும் என காட்டியது..
6) பொது மக்களின் குரலையும் பாராளுமன்றம் கேட்டாக வேண்டும் என்ற ஒரு முன்னுதாரணம் ஏற்படுத்தியது(?????)
7) பாராளுமன்றத்துக்கு ஊழலை ஒழிக்கும் உத்தேசமே இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது..
8) எனவே நம் போராட்டம் இன்னும் பெரிதாக இன்னும் உத்வேகத்துடன் இருக்கவேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.
அந்த மஹாலிங்கம்தான் இந்த போராட்டங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்து இன்னும் பெரிய அளவில் மாற்றங்கள் வர அருள் செய்யணும்...
சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....