Monday, December 12, 2011

எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்???

போன வாரம் இங்கு கொல்கத்தாவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தீப்பிடித்து சுமார் 93 பேர் மரணமடைந்துவிட்டனர்.

இதற்கு முன்பும் கொல்கத்தாவில் இதே போல் சில இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்று பலர் இறந்திருக்கிறார்கள்.

கொல்கத்தா மட்டுமல்ல, கும்பகோணம் பள்ளி, திருச்சி திருமண மண்டபம், தில்லி தியேட்டர் என்று பல இடங்களில் தீ விபத்துக்கள் நடை பெற்றிருக்கின்றன.

மனித உயிர்களை மிகவும் துச்சமாக மதித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதே இந்த அனைத்து விபத்துகளுக்கும் மூல காரணம்.

திட்டமிடாத நகர வளர்ச்சி.. குறுகலான இட வசதிகள்.. நெருக்கடியான வசதி குறைவான இடங்கள்..

இதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் வெறும் கடிதம் கொடுத்துவிட்டு தம் கடமையை நிறைவேற்றி விட்டதாக ஜம்பமடித்துக் கொள்கின்றனர்.

மரித்துப்போன மனிதர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் என்ன பதில்?? அரசாங்கம் அறிவிக்கும் சில ஆயிரம் / லட்ச ரூபாய்களால் அந்த இழப்புகளை சரிசெய்ய முடியுமா??

இதேபோல இன்னும் எத்தனை இடங்கள் தீயில் எரிய காத்திருக்கின்றனவோ தெரியவில்லை.

இந்த பிரச்சினையின் ஆணிவேர் நம் அலட்சியம். தேவையான வசதிகளை செய்வதில் அலட்சியம். செய்பவர்களை கண்காணிப்பவர்களின் அலட்சியம். இந்த சூழலில் இருக்கும் சில லஞ்ச லாவண்யமும் மிக முக்கிய காரணம்..

இந்த இறப்புகளுக்கு யாருக்கு என்ன தண்டனை தர?? இவர்களையும் அப்படியே எரித்துவிடலாமா??

எரிந்த பின் எல்லோரும் அழவும், சிலர் மரிக்கவும் ஒருசிலரின் இந்த அலட்சியம் காரணமாகின்றது.

எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்து, தேவையான வசதிகளை, சட்டப்படி செய்து, அதிகாரிகளும் நேர்மையுடன் இதை கண்காணித்து, தேவையான நேரத்தில், சரியான நடவடிக்கைகள் எடுத்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.. செய்வார்களா??? காலமும் கடவுளும் தான் பதில் சொல்லணும்..

சதுரகிரியாரே சரணம்... சுந்தரமஹாலிங்கமே போற்றி...

3 comments:

shanmugavel said...

//திட்டமிடாத நகர வளர்ச்சி.. குறுகலான இட வசதிகள்.. நெருக்கடியான வசதி குறைவான இடங்கள்..//

உண்மை இதுதான்.இதை செய்யவேண்டியவர்கள் செய்யவில்லை.பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

Dear sankar sir,thankalin vethanai purikirathu nammaal ippadi karuthukkalai mattume pakirindhu kollamudium. nam naddil launcham endru illamal irukkumo andru than idhupol asaambavitham maraiyum thanks

Sankar Gurusamy said...

Dear Anonymous, Thanks for your visit and comments.