Wednesday, January 12, 2011

இலவசங்கள் - தேவையா? என்ன குடுக்கலாம் (!) (?)

இது தமிழகத்துக்குத் தேர்தல் ஆண்டு. ஒவ்வொரு கட்சியும் என்ன இலவசமாக் குடுத்து ஓட்டுக்கள கவர்பண்ணலாம்னு மண்டயப்பிச்சுக்கிட்டு இருக்கரதா இங்க கொல்கத்தாவுல கேக்குராங்க....(???? !!!!) ஏன்னா இங்க மேற்கு வங்கத்துல அதெல்லாம் கிடையாதாம்... தமிழக வாக்காளர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறார்கள்...

இந்த இலவசங்கள் சரியா, தப்பாங்கறதவிட தேவையா?  தேவைஇல்லையாங்கறது தான் முக்கியம். நம் தமிழக முதல்வர் இதுபத்தி சொல்லும்போது, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும் என்றார். இது குறித்து என்னுடய சிந்தனைகள்.

நான் நம் முதல்வர் சொல்வதை வழிமொழிகிறேன். நிச்சயமாக ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தேவைதான். ஆனால் என்ன குடுக்குறதுங்கறதுதான் பிரச்சினையே...  டிவி, காஸ் அடுப்பு, இலவச விவசாய(???)  நிலம் (அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும்), வீடு கட்ட பணம் (இதுவும் ஒரு குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும்), ஒரு ரூபாய்க்கு (உபயோகப்படுத்த முடியாத) அரிசி, இப்பிடி நிறையக் குடுக்குறாங்க இப்ப...

இந்த இலவசத்துலயே ஒரு ரூபாய் அரிசித்திட்டம் சிறந்தது. அதுவும் நல்ல அரிசியாப் பாத்துக் குடுத்தாங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும். (இதுல பதுக்கல் கடத்தல் இவைகள தடுத்து நிறுத்துனாங்கன்னா அதி சிறந்த திட்டமா இருக்கும்).

விவசாயத்துக்கு இலவச மின்சாரம், இலவச பம்புசெட் - இன்னும் சிறப்பானது.

ஆனா மத்ததெல்லாம் இலவசமாக் குடுக்கத் தேவை இல்லைன்னு நினைக்கிறேன். 

வேற சில விசயங்கள் இலவசமாத் தேவைப்படுது.. அதுல என்ன குடுக்கலாம், எப்பிடிக் குடுக்கலாம் ??? இலவசத்த இரண்டு வகையாப் பிரிக்கலாம். நேரடி இலவசம், மறைமுக இலவசம்.

இவை நேரடியான இலவசங்கள் :

1) இலவசக் கல்வி - சிறந்த தரத்துடன், புத்தகங்க்களுடன் - குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை முடிந்தால் கல்லூரிப் படிப்புவரை - அனைத்துப் பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் - அனைவருக்கும் - 3 வேளை ஊட்ட சாப்பாட்டுடன் 

2) இலவச சிறந்த மருத்துவ வசதி - எல்லாக் குடிமக்களுக்கும்

3) களர் மற்றும் விவசாயம் செழிக்காத நிலங்களைப் பண்படுத்த - இலவச ஆலோசனை மற்றும் அதை சரிசெய்ய முழு வசதிகள், கருவிகள், பொருட்கள் இலவசமாகத் தரப்பட வேண்டும்.

4) ஒவ்வொரு விவசாய வட்டத்துக்கும் - 1 டிராக்டர் மற்றும் ஒவ்வொரு விவசாயிக்கும் குறிப்பிட்ட அளவு டீசல் - இலவசமாக

5) சிறு, குறுந் தொழில் முனைவோருக்கான கருவிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

6) ஒவ்வொரு கிராமத்துக்கும் இலவச இணைய வசதி செய்து தரப்பட வேண்டும்.
    
7) இலவசப் பயிர்ப் பாதுகாப்பு இன்சுரன்ஸ். 

8) சுத்தமான குவாலிடியான சானிடரி நாப்கின் - அனைத்துப் பெண்களுக்கும்.. இலவசமாக

9)சுத்தமான குவாலிடியான காண்டம் மற்றும் கருத்தடை சாதனங்கள்.   இலவசமாக

இவை மறைமுக இலவசங்கள் :

1) விவசாய, கைத்தொழில், சிறு, குறுந் தொழில் முனைவோருக்கு வட்டியில்லாக்கடன்.

2) குடும்பத்தில் முதல் வீடு வாங்குவோருக்கு, கட்டுவோருக்கு சலுகை வட்டியில் கடன்

கீழ்க்கண்ட அடிப்படை வசதிகள் அனைத்துப் பகுதிகளுக்கும் இலவசமாக செய்துதரப்பட வேண்டும் :

1) சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை- 24 மணி நேரமும்

2) சிறந்த சாக்கடை வசதி 

3) சுத்தமான கழிவரை வசதிகள்

4) சிறந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

இந்த இலவசங்களத் தவிர கீழ்க்கண்ட வசதிகள் ஏற்பட்டா, தானா தொழில்கள், வேலைவாய்ப்புகள் வளர்ந்து மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்.

1) கிராமத்தில் தொடங்கப்படும் மற்றும் 95% உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வரிச் சலுகை.

2) 24 மணிநேரத் தடையில்லா மின்சாரம்

3) சிறந்த சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி அனைத்துக் கிராமங்களுக்கும், சிறு, பெரு நகரங்களுக்கும்

4) ஒவ்வொரு விவசாய வட்டத்துக்கும் ஒரு குளிர் பதனிடு வசதியோடு கூடிய ஒரு சிறந்த சேமிப்புக் கிடங்கு.

5) விவ்சாய, கைத்தொழில் மற்றும் கைவினைப்பொருள்களை அவர்களே விற்றுக்கொள்ள சிறந்த சந்தை வசதி.... மற்றும் இப்பொருள்களை அரசாங்கம் நியாயமான விலையில் வாங்கி விற்கும் சிறப்பு அங்காடிகள்.


யோசிக்கும்போதே சந்தோசமா இருக்கு... நடந்தா இன்னும் புளகாங்கிதமா இருக்கும்...

ஆண்டவா,  சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்... மனசு வைய்யுங்க.... மலையேறி வந்து மொட்ட அடிச்சுக்கிரதா வேண்டிக்கிறோம்.... அரோகரா....

6 comments:

Anonymous said...

ஆண்டவா, சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்... மனசு வைய்யுங்க.... மலையேறி வந்து மொட்ட அடிச்சுக்கிரதா வேண்டிக்கிறோம்.... //
அவ்வளவு உயரம் நடக்கணுமா

Sankar Gurusamy said...

சதீஷ், இதெல்லாம் நடந்தா, நிச்சயம் செய்யலாம். முடிந்தால் தினமும் சென்று அவருக்கு வழிபாடு நடத்தத் தயார்... :-)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

சண்முககுமார் said...

அருமையன் பதிவு

Sankar Gurusamy said...

திரு சண்முககுமார், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

visvanath said...

If such things happen in our country,then it will be the place of god's gift.

Sankar Gurusamy said...

திரு விஸ்வநாத், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..