Monday, January 31, 2011

கால் சென்டர் - ஒவ்வொரு தொகுதிக்கும்....

நம் நாட்டில் எது எதுக்கெல்லாமோ கால் சென்டர் வைத்து டோல் ஃபிரி நம்பர் குடுத்து சேவை தருகிறார்கள். ஏன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு டோல் ஃபிரி நம்பர் கொடுத்து அரசு அதிகாரிகள் சேவை செய்யக்கூடாது??? இது பற்றிய எனது சிந்தனைகள்...

100,101,102,103.... இப்பிடி வரிசையா மக்களுக்கு சேவை செய்யும் துறைகளைத் தொடர்பு கொள்ள போன் நம்பர்கள் தருகிறார்கள். ஆனால் நமது நாட்டில் பொதுவாக மக்களுக்கு அதிக தொடர்புடைய துறைகளுக்கும் இந்த வசதி விரிவு படுத்தப்படவேண்டும். முடிந்தால் அனைத்து அரசு சேவைகளும் ஒரே எண்ணில் கிடைக்கச்செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நம் ஏரியாவில் மின் இணைப்பு சரியில்லை, தண்ணீர் வரவில்லை, சாக்கடைத் தேக்கம், ரேசனில் பொருள் கிடைக்கவில்லை (அல்லது எப்போது கிடைக்கும் என்ற விவரம்) மற்றும் இதுபோன்ற உள்ளாட்சி சம்பந்தப்பட்ட குறைகளுக்கு ஒரு டோல் ஃப்ரீ நம்பர் தந்து தகவல் தர அல்லது யாரைத் தொடர்பு கொள்ளலாம் (அவர்களின் போன்நம்பர், முகவரி உட்பட)  என்ற விவரம் பெற இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

 இதற்கான தேவை இப்போது இருக்கிறது. இதை அந்தந்தத் தொகுதியின் வார்டு கவுன்சிலரோ, தொகுதி சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினரோ இதை செய்ய முன் வரவேண்டும். ஏன் தொகுதியின் குறை நிறைகளைத் தெரிந்து கொள்ளவும், வளர்ச்சிப்பணிகளில் ஏற்படும் தொய்வு, குறைகளைத் தெரிந்து களையவும் இது பயன்படும்.

முடிந்தால், ஆர்வமுள்ள,  ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், காவலர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஒரு சில கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து,  வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் / குறைகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்கு ஆகும் செலவை, சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியில் இருந்து அளிக்கலாம். (முடியுமா என்று தெரியவில்லை)...


யோசிக்க நல்லாத்தான் இருக்கு.. ஆனா செய்வாங்களான்னு தெரியல...

கடவுளே!!! இப்பிடி நல்ல விசயங்கள் நடக்க நீங்கதான் ஆவன செய்யணும்.

ஓம் நம சிவாய!!! சதுரகிரியாரே போற்றி!!!!!

4 comments:

ரமேஷ் கார்த்திகேயன் said...

nalla yosai than
ana yaru panna poranganu pakalam !!

Sankar Gurusamy said...

Dear Ramesh Karthikeyan, At least let us jot down what will bring some change in our society. If any of us come to such a level, definite these things will act as a tool to implementation.

Thanks for your visit and comments

arasan said...

நல்ல அலசல் ..

Sankar Gurusamy said...

Dear Mr.Arasan, Thanks for your visit and comments