Thursday, January 6, 2011

விவசாயம் முன்னேற....

நம் நாடு இந்தியா விவசாய நாடு. பெரும்பான்மையான கிராம மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே நம்பி இருக்கிறார்கள். ஆனால் விவசாயத்துக்கான வசதி வாய்ப்புகள், வருமான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்தால்தால் ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

விவசாயம் என்பது எங்கோ கிராமத்தில் செய்யப்பட்டு, விளைபொருள்களைமட்டும் நாம் வாங்கிக்கொள்ளும் இன்றைய நிலையில், முதலில் நமக்குத்தேவை அதுபற்றிய விழிப்புணர்வு. எனது நண்பனது மாமா விவசாயம் செய்து வந்தார். அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, மிகவும் விரக்தியுடன் "இந்த நாய்ப் பொழப்பு நம்மளோட போகட்டும் தம்பி" என்றார். "ஏன் அப்பிடி சொல்றீங்க"-னு கேட்டதுக்கு அவர் சொன்ன பதில் : "விவசாயிக்கு சலுகை, பெருமை எல்லாம் அவன் அத உட்டுட்டு வேற தொழிலுக்குப் போயிரக்கூடாதுங்றதுக்காகத்தான். அவன் முன்னேறி வேற தொழிலப் பாக்கப் போயிட்டா மத்தவங்களுக்கு சாப்பாடு கிடைக்காதுல்ல. அதான். இது ஒரு நிலை இல்லாத வருமானம் தர்ர தொழிலா இருந்தது. இப்ப இது நஷ்ட்டத்த மட்டுமே தர்ரதா ஆயிருச்சு. கொஞ்சம் நிலத்த வித்து என் பையன  இஞ்சினியருக்குப் படிக்கவச்சிருக்கேன்.  மீதி நிலத்த ஏதாவது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு வித்துட்டு நானும் அவன் கூடப் போயிரப்போரென்". கேட்டுட்டு ரொம்ப கஷ்டமாப் போயிருச்சு. இது இவருக்கு மட்டும் உள்ள பிரச்சினையாகத் தெரியவில்லை. இப்போது வருமானத்துக்கு வேறு வழியே இல்லாதவர்கள் மட்டுமே விவசாயத்தை செய்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்... அரசாங்கம் செய்யவேண்டியது என்ன?

அரசாங்கம் செய்யவேண்டியது :

விவசாய நிலங்களை பிற உபயோகத்துக்கு மாற்றுவதை தடை செய்யவேண்டும்.

விவசாய நீர் ஆதாரங்களான குளம், குட்டை, கண்மாய், ஏரி, அணை, வாய்க்கால் இவைகளைப் பாதுகாக்கவேண்டும். கரைகளை பலப் படுத்த வேண்டும். தூர்வாரி செம்மைப் படுத்தவேண்டும். கழிவுநீர், நன்னீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவேண்டும். இவைகளில் நில ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்.

இயற்கைமுறை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கூட்டுறவு முறை விவசாயத்துக்கு மற்றும் பண்ணை சார்ந்த விவசாயத்துக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

சிறு விவசாயிகளுக்கு அனைத்து வங்கிகளிலும் வட்டியில்லாக் கடன் வழங்கப்படவேண்டும். அதற்கு பயிர்ப் பாதுகாப்புக்கும்  இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்யவேண்டும். ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

தரமான விதைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும் வருடம் முழுவதும் வேலைவாய்ப்பும் வருமான வாய்ப்பும் தரவேண்டும்.

ஒவ்வொரு விவசாயவட்டத்துக்கும் (5கி மீ சுற்றளவுக்கு)  விவசாய விளைபொருள்களைப் பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும். அந்த விலைக்கு வியாபாரிகள் வாங்க முன்வராதபோது அரசாங்கமே அவைகளை வாங்கி சில்லரைக் கடைகள் மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கு இணைய, கணிணி வசதிகளை உபயோகிக்க வேண்டும். ஊகவணிகத்துக்குப் பதிலாக இருப்பு வணிகத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

அனைத்து விவசாயக் கிராமங்களுக்கும் நல்ல சாலைவசதி செய்து தரப்பட வேண்டும்.

தடையில்லா மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் சலுகை விலையில் வழங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செலவிடப்படும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும்( காலை 10லிருந்து 12 வரை, மதியம் 2 லிருந்து 4 மணிவரைம, இரவு 11 முதல் 3 மணிவரை  இதுபோல).


விவசாயத்துக்கு அரசாங்கமோ, தனியார் நிறுவனங்களோ Sponsor செய்ய வேண்டும். (இதற்கு ஈடாக விவசாய நிலங்களில் விளம்பரப்பலகைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம்-???) ஒவ்வொரு தனியார் நிறுவனமும் குறைந்தது இத்தனை ஏக்கர் விவசாயத்துக்கு Sponsor செய்ய நிர்ப்பந்திக்கவேண்டும். முடிந்தால் அவர்களே அந்த விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்று அல்லது வாங்கி பணத்தை விவசாயிகளுக்கு அளிக்கலாம்.

நாம் செய்யவேண்டியது :

நம்மால் முடிந்த அளவுக்கு விவசாய நிலங்களைப் பாதுகாக்கவேண்டும். நம்மிடம் உள்ள பாரம்பரிய விவசாய நிலங்களை விற்க நேர்ந்தால்  விவசாயிகளுக்கும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கும் விற்கவேண்டும்.

நம்மிடையே நல்ல வசதி இருப்பவர்கள், விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கும் தொழில்களில் ஈடுபடவேண்டும்.


இதுக்கு மேலும் செய்ய முடிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான்... ஆண்டவா எங்க நாட்டு விவசாயிகளக் காப்பாத்துன்னு பிரார்த்தனை பண்ணணும். இல்லன்னா அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கஷ்டம்தான்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....

6 comments:

Anonymous said...

வலைத்தளத்தில் சமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வூட்டும் பல அறிய படைப்புகள் உங்களிடமிருந்தே கூட வெளிப்படலாம் என நம்புகிறேன்! எதிர்பார்க்கிறேன்!
Pl Visit,
http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_649.html

Sankar Gurusamy said...

திரு சாய் கோகுல கிருஷ்ணாவுக்கு, தங்கள் வருகைக்கும் கமெண்ட்க்கும் நன்றி.. நான் இப்போது தான் எழுத ஆரம்பித்து இருக்கிரேன். எவ்வளவு நாள் முடியும் என்று தெரியவில்லை. எவ்வளவு சரக்கு வரும் என்றும் புரியவில்லை. இருந்தாலும் முடிந்த அளவுக்கு உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிரேன்.

Anonymous said...

ellam eluthurathu rompa easy , seyalil kattanum !!!! aduthavangala pali sollurathayum , avnga seyvanga ivanga seyvanganu ethirparkkurathum neyayam illay . ivalavu sollura neenga ithuvara enna panni irukkinga ???? athayum eluthunga !!!!

Sankar Gurusamy said...

Dear Anonymouns, I am not in that position to something. But the people in position can do something. I am able to give these ides. If these ideas reach right place and if these can be implemented in some form, I feel definitely some issues can be resolved. Whatever is in my mind for various issues, I am putting forward. Not just problems, but with solutions. If I am able to do something. I am the first person to do that. Thanks for your visit and valuable comments.

Anonymous said...

Neenga ithuvara onnum pannala !!!! aana idea mattum kuduppinga ????? ithu enna niyayam .... kalathula irukkuravanukkuthan kastam therium . veliyil irunthu sollurathu rompa easy ... neenga sollura valiyil neenga oru step eduthu vainga. mattavargal ungala parthu varuvanga. intha nattirkku seyal veerargal than thevai . sol veraragal intha nattil eralam !!!eralam !!!!.

Sankar Gurusamy said...

Dear Anonymous, If you expect good people to enter politics voluntarily, the time is not fully ripe.. The good people are really struggling in the politics. Most of them are just pulled into it. Even if they want to do something, they are also not able to do. This situation should change. There is s subtle way to handle this spiritually which I am already doing. The process is very slow. The first step is to make people think what they want exactly. Put down and spread that thought to all spiritually so that the change start happening. This is my way. I am putting my thoughts in this blog. This is without much masalas. Raw stuff... So very boring topics in boring way. Not much hits I expect. Only people with such good intention can think vigorously about the expected change. This will spiritually affect the system. While the change start,we all will feel it.

Hope you might have read my other articles. Thanks for your concern and appeciate sharing your views.