Wednesday, January 12, 2011

அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

இன்றைக்கு அரசு மருத்துவமனைகள் இருக்கும் நிலை மிகவும் பரிதாபமானது. பெரும்பான்மை ஏழை மக்கள் இப்போதும் அரசு மருத்துவமனைகளையே நம்பி உள்ளனர். நானும் சில சந்தர்ப்பங்களில் அரசு மருத்துவமனைகளின் சேவையை உபயோகப்படுத்தி இருக்கிறேன். அழுக்கான வராண்டாக்கள், பெட் இல்லாத கட்டில்கள், வராண்டாவில் சிகிச்சைபெறும் நோயாளிகள், நாற்றம் எடுக்கும் கழிவறைகள், சுகாதாரமில்லாத உணவு வகைகள் மற்றும் பல சோகங்கள். இவ்வளவு இருந்தும் நமது அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சேவை மகத்தானது. சிறந்த மருத்துவர்கள், மோசமான சூழல் - நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்கவே இவற்றை இப்படி வைத்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. இப்போது, கலைஞர் காப்பீட்டுத்திட்டம் வேறு வந்து தனியார் மருத்துவமனைகளை மேலும் வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

ஏன் இந்த நிலை? மாற்ற என்ன செய்யவேண்டும்?   எனது சிந்தனைகள்....

இப்போதய நிலை:

போதுமான துப்புறவுத் தொழிலாளிகள் இல்லை. இருக்கும் சில தொழிலாளிகளும் சோர்ந்துபோய் தன்னால் முடிந்ததை செய்துவிட்டு அவ்வளவுதான் செய்யமுடியும் என்று விட்டுவிடுகிறார்கள்.

பொதுமக்களுக்கும் நமது அரசு மருத்துவமனைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வது இல்லை. வராண்டாவிலேயெ ஆங்காங்கே எச்சில் துப்புவது, கழிவறைகளை சரியாக உபயோகிக்காதது, மற்றும் பல...

சுகாதார பராமரிப்புப் பொருள் வாங்க போதுமான நிதிவசதி இல்லை.

போதுமான மருத்துவர்கள் இல்லை. இருக்கும் மருததுவர்களுக்கும் சம்பளம் போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு ஒரு சுகாதார அமைச்சர் கட்டாய கிராம மருத்துவசேவை செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தபோது எழுந்த எதிர்ப்புதான் நினைவுக்கு வருகிறது.

போதுமான மருத்துவ உபகரண வசதிகள் இல்லை. இருக்கும் உபகரணங்கள் பழுதானால் அவற்றை சரி செய்வதற்கு பலநாள், வாரம், மாதம் காத்துக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது.


ஏன் இப்பிடி இருக்கு ?

மிக முக்கிய காரணம் அரசின் அலட்சியப் போக்கு. அரசின் இந்த அலட்சியப்போக்கு சில பல பணியாளர்களையும், மருத்துவர்களையும்,  செவிலியர்களையும்  ஆட்கொண்டது.

போதுமான மருத்துவர்கள் இல்லாதது. அவர்களுக்கான சம்பளம் குறைவாக இருப்பது.

நிரந்தரமாக போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாதது. பற்றாக்குறையோடே அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் நடைபெறுகின்றன.


என்ன செய்யலாம் :

முதலில் அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான சுழல் நிதி அளிக்கவேண்டும்.  போதுமான கருவிகள், உபகரணங்கள் வாங்கப்படவேண்டும். இதற்கு, அந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களோ, ரோட்டரி, லயன்ஸ் கிளப் களோ ஆவன செய்ய வேண்டும்.

போதுமான பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு சிறந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களின் சிறந்த சேவைகளுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும்.  இதற்கும், அந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களோ, ரோட்டரி, லயன்ஸ் கிளப் களோ ஆவன செய்ய வேண்டும்.

அதிகப்படியான மருத்துவர்கள் உருவாவதற்கு ஆவன செய்யப்படவேண்டும். இப்போது இருக்கும் கல்லூரிகளில் இடங்களை அதிகப்படுத்தியோ அல்லது மேலும் சில கல்லூரிகளைத் துவக்கியோ, இதை கட்டாயம் உடனடியாக செய்யவேண்டும்.

எங்கெங்கு அரசுக் மருத்துவமனைக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்பட வேண்டுமோ    அவை உடனே செய்யப்படவேண்டும். அரசு இதற்கு உடனடியாக நிதி ஒதுக்கி ஆவன செய்யவேண்டும்.

அரசாங்கத்தின் சுகாதாரக் கண்காணிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, அவர்களின் பணிவேகம் முடுக்கிவிடப்படவேண்டும்.

மேலும் பல அரசு மருத்துவமனைகள் கட்டப்படவேண்டும். அங்கு குறையில்லாமல் பணியாளர்களும், செவிலியர்களும், மருத்துவர்களும் நியமிக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு தனியார்மருத்துவமனையும் சில பெட்களை ஏழைகளுக்கு என்று ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப் படவேண்டும்.

பொது மருத்துவமனை சுத்தமாக இருப்பதற்கு சில துப்புறவு செய்யும்  மிசின்கள் வாங்கவேண்டும்.

பொதுமக்கள் பொறுப்புடன் மருத்துவமனைகளை சுத்தமாகப் பராமரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.  அப்போதுதான் அங்கு இருக்கும் நிலை அவர்களுக்குத் தெரிந்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். சமீபத்தில் ஒரு கலெக்டர் தன் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க அனுமதித்தது செய்தியாக வந்தது. அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள சில குறைகளை  நிவர்த்தி செய்ய நடவடிக்கையும் எடுத்தார். இதுபோல அனைத்து அரசு அதிகாரிகளும், அமைச்சர் பெருமக்களும் செய்யவேண்டும்.


செய்வார்களா??? ஏக்கமாக இருக்கிறது... கடவுள்தான் மனசு வைக்கணும்... ஆண்டவா போற்றி.....

2 comments:

Anonymous said...

ungalukku arasial vathiya vitta vera aal kidaykkala kuray solluvatharukku ?????. summa parthu engiratha vittutu, ulla irangi poradi jaikka parunga sir..... ithay ellam sayrathukku veliya irunthu aal varamaattanga .... kadavul varamattar .... neenga sutha paduthanumnu ninacha muthal kaya unga kay irukkanum .... atha vittutu kuraykala parkkama .... konjam neraykala pathi eluthunga

Anonymous said...

படித்தவர்களும் மருத்துவர்களும் போராடி வாங்கலாமே வசதிகளை.ஊரில் உள்ளவர்கள் ஒரு குழுவாக கண்காணிக்கலாம்.வசதியில்லாதவர்களும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர்களுக்கு உள்ள மதிப்பே இல்லை என்றால் யாரைத்தான் நோவது.