Wednesday, January 19, 2011

ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுமா ?????

ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுமா ????? அதாவது, இந்த ஊழல், லஞ்சம், கருப்புப் பணம், வறுமை, விலைவாசி மற்றும் பல விசயங்களில் சரியான நடவடிக்கை இருக்குமா??? எனது சிந்தனைகள்...

ஆட்சி மாறும்போது, அதில் பங்குபெறுபவர்கள் மட்டுமே மாறுகிறார்கள்... காட்சிகள் அப்படியேதான் இருக்கும்.... என்ன .. அன்று எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இன்று ஆளும் கட்சியாகவும், அன்று ஆளும் கட்சியாக இருந்தவர்கள் இன்று எதிர்கட்சியாகவும் மாறுகிறார்கள்.. மற்றபடி, ஆட்சி நடத்தும் விதம், முன்னாள் ஆளும் கட்சிகள் மீது உள்ள புகார்கள் மேலான நடவடிக்கை எடுப்பதுபோன்ற ஒரு தோற்றம் (உண்மையில் எடுப்பதில்லை), வீர வசனங்கள், சில நாட்கள் தூய ஆட்சிபோல நடந்து கொள்ளுதல் இதுபோன்ற காட்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். சில நாட்கள் ஆட்சிகட்டிலில் இருந்தபின், மீண்டும் அதேபோல ஊழல், லஞ்சம், விலைவாசி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்....

ஏனென்றால் இன்று அரசியல் ஒரு வியாபாரம். பெரும் பணமுதலீடு செய்து பல காலம் காத்திருந்து, ஆட்சி வந்தவுடன் முதலீட்டை எப்படி பல மடங்காக எடுக்கவேண்டும் என்ற தந்திரம் தெரிந்த வியாபாரிகளால் நடத்தப்படும் ஒரு நிறுவனம். இன்று ஒரு கட்சியில் இருப்பவர்கள் நாளை மாற்றுக்கட்சியில் சேர்ந்து கொளகைமுழக்கம் இடுவார்கள். மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பி கண்ணீர்வடித்து கட்டிக்கொள்வார்கள்.  அதேபொல கூட்டணி என்ற பெயரில் ஒரு நாடகம் நடக்கும். அதில் வில்லன் ஹீரோ வுடனும், ஹீரோயின் காமெடியனுடனும் டூயட் பாடும் அதி அற்புதக் காட்சிகள் அரங்கேறும்.

இவைகளைப் பார்த்து நம் போன்றபாமரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து "வாழ்க,  ஒழிக" கோஷங்கள் போடவேண்டும். வெட்கக்கேடு....

இந்த அரசியல் விளையாட்டில் எந்தப் பாகுபாடும் இல்லை. திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழகமோ, கம்யூனிஸ்ட் ஆளும் மேற்கு வங்கமோ, காங்கிரஸ் ஆளும் ஆந்திரமோ, பாரதீய ஜனதா ஆளும் கர்நாடகமோ எந்த விதமான வேறுபாட்டுடன் இல்லை.

இவ்வளவு ஏன்? ஒரு முறை மாவோயிஸ்ட் டுகள் கூட நேப்பாளத்தில் ஆட்சியைப் பிடித்து அவர்களும் அப்படியே என்று காட்டிக் கொண்டார்கள்.

"இன்றைக்கு உண்மையில் தவறு செய்யாதவர்களில்  பெரும்பான்மையானோர் தவறு செய்ய சந்தர்ப்பம் வாய்க்காதவர்களே"

நேர்மையானவர்கள் கூட இப்படிப்பட்ட சூழலில் மாட்டிக்கொண்டு மாறிவிடுகிறார்கள் அல்லது மாற்றப்பட்டு விடுகிறார்கள். இது பற்றி எனது முந்தய பதிவு : ஏன் இப்படி இருக்கிறார்கள்???

ஏன் இந்த நிலை???

இதற்கு முக்கிய காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்தது.

"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்"

என்று வள்ளுவப் பெருந்தகை அன்றே சொல்லியிருக்கிறார்.

கேவலமான தொலைக்காட்சித் தொடர்கள், மோசமான சினிமாக்கள் இவை மனித மனங்களில் ஏற்படுத்திய தீய எண்ணங்களின் விளைவுகள் இப்போது ஒரு புதிய சந்ததியினரின் "Gene" களைப் பாதித்து, நேர்மையான எண்ணங்களை குலைத்துவருகிறது. ஆம்.. நமது சிந்தனைகளின் ஆற்றல் நமது சந்ததிகளையும் நமது சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.

தனிமனித ஒழுக்கம் என்பது சீர்கெட முக்கிய காரணிகளாக சினிமாவும், தொலைக்காட்சிகளும் இருக்கின்றன. அதுவும் இவை இப்போது அரசியல் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாகவும் ஆகிவிட்டன.

இவற்றைத் தட்டிக்கேட்கும் பொறுப்பில் ஒருகாலத்தில் இருந்த பத்திரிக்கைகளில் பெரும்பான்மையானவை இப்போது அவற்றில் பங்குதாரராக மாறிவிட்ட சூழல் மிகவும் பரிதாபமானது.

சுதந்தரமாக இருப்பதாக நாம் எண்ணும் இந்த வலைப் பதிவுலகமும் வெகு விரைவில் பத்திரிக்கைகளின் வரிசையில் சேரும். இது காலத்தின் கட்டாயம். இதை ஏன் கூறுகிறேன் என்றால் இப்போது பதிவுலகில் வோட்டுக் காக , ஹிட்டு க்காக பதிவுகள் இடுதல், இவைகளைப் பின்பற்றி பதிவுகளை வரிசைப் படுத்துதல் தொடங்கி இருக்கிறது. இதில் நமது வோட்டுப் பொறுக்கிக் கட்சிகள் (இவர்கள் இதில் மிகவும் தேர்ந்தவர்கள்)  பங்கு கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவர்கள் செய்யும் ஒரு "Organised" ஆக்கிரமிப்பில் இருந்து பதிவுலகம் தம்மைக் காத்துக் கொள்ள இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

எனவே நமது அரசியல்முறை மாற்றி அமைக்கப்பட கருத்தாக்கம் செய்யப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இது பற்றிய எனது சிந்தனைகளின் முந்தய பதிவு : நாடாளுமன்றம் - தேவையா? - நமது தேர்தல் முறை சரியா?

அதனால ஆட்சிகள் மாறினால் காட்சிகள் பெரிதாக மாறும் என்ற நம்பிக்கை இப்பொதைக்கு இல்லை. ஒரு பிரளயம், போர், பெரிய சமூக இடர் இவை மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் னு நினைக்கிறேன்.

கடவுளே!! ஆண்டவா!!!! சதுரகிரி வாழ் பரம்பொருளே!!! எல்லாரையும் காப்பாத்து....சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு.... அரோகரா....

4 comments:

பாலா said...

ஐயா குருசாமி,

தங்களின் புலம்பல் மிகவும் சரியானது தான் .ஆனால் யார் இதை மாற்றப்போகிறார்கள் .

உலகம் அரசியல்வாதிகளின் கையில் சிக்கிக்கொண்டு சீரழிகிறது.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Sankar Gurusamy said...

Dear Mr. Bala, Some elements in the Blogging space is creating an opinion that if the present Government changes the things will change. But this is not true. This blog post is my genuine concern about a larger issue in hand rather than some minor change in the Government. Hope you got my core point of this Post.

Thanks for your visit and valuable comments. Keep visiting.

Moorthy said...

Responsible article Sankarji..Looking at the past history, approx once in every 200 years, India undergoes a a major change of changing its Rulers..Now the age for our democracy is just 65 years only..So, let us wait for another one and half century to see a major change..lage raho...

Sankar Gurusamy said...

Murthy, That is very long period to wait. I feel, the things start changing very soon. Let us expect that. Only when we begin to believe now, the change will start coming soon.