Friday, January 7, 2011

விலைவாசி உயர்வும், அதற்கு தீர்வும் (?)

என் உறவினர் ஒருவர் விளையாட்டாக சொன்னது : "இன்றைய தேதியில் பை நிறைய காசு குடுத்து கை நிறைய காய்கறி வாங்க வேண்டி உள்ளது."  இது உண்மையில் பெரிய விபரீதம். இந்தோனேசியாவில் 10,000, 1,00,000 க்கு எல்லாம் ருபயா நோட்டு குடுக்கிறார்கள். ரஷ்யாவில் பெரஸ்ட்ராய்க்காவுக்குப் பிறகு கரன்சி நோட்டுகளை டாய்லெட் பேப்பரா யூஸ் பண்ணாங்களாம். அதுபோல நம் நாட்டிலும் நடந்துவிடும் போல இருக்கிறது.

ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ 100 த் தொட்டுவிட்டு லேசாகக் கீழிறங்கி ரூ 60 - 70 ல் நிற்கிறது (தரமும் அதுக்குத் தகுந்தாற்போல மிகவும் கீழிறங்கிவிட்டது). ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 100 க்கு விற்கிறது (???). ஒரு கிலோ தக்காளி ரூ 60 க்கு விற்கிறது. சீனி, அரிசி, பருப்பு, பால், பூண்டு, மளிகை சாமான் அனைத்துப் பொருள்களின் விலையும் விண்ணைத் தாண்டி சென்று விட்டது... ஒரு குடும்பத்தின் மாத மளிகை பட்ஜெட் கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தது 3 மடங்கு உயர்ந்துவிட்டது. பெருநகரங்களில் வீட்டு வாடகையும் இதுபோல பல மடங்கு உயர்ந்துவிட்டது.  

இந்த லட்சணத்தில் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும், விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடியுமா என்று தெரியவில்லை என்று பேட்டிவேறு கொடுத்து எரிச்சலைக் கிளப்புகிறார்கள். (இவர்களை எதற்குத் தேர்ந்தெடுத்தோம் என்றே புரியவில்லையோ இவர்களுக்கு)

இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்ன செய்யலாம்? எப்பிடி செய்யலாம்? எனது சிந்தனைகள்...

காரணங்கள் :

1) தனிமனிதனின் தேவைகள் உயர்ந்து. நேற்றய ஆடம்பரப் பொருள் இன்று அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக ஆனது. உதாரணம் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிசின், மிக்சி, ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் ....  இவற்றைப் பூர்த்திசெய்ய, இப்போதய லாபக் கணக்குகள் போதாமல் இருப்பது.  இதற்காக அதிக லாபத்துக்கு பொருள்களை விற்பனை செய்ய முயல்வது.

2) (பண, அதிகார) பலம் கொண்ட தனிமனிதர்களின்  பேராசை. விளைவு, பதுக்கல்,  monopoly, அதிக லாபத்துக்குமட்டுமே பொருள்களை விற்பனைசெய்தல்.

3) சில கட்சிகளுக்கு நன்கொடை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அன்பளிப்பு (???)  கொடுத்து விலையை உயர்த்திக்கொள்ளும் குறுக்கு புத்தி உடைய மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள்.

4) பொருட்களின் விலையை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் பெரும்பான்மை அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கடமையை செய்யாமல் இருப்பது. (என்ன செய்வது, நமது அமைச்சருக்கு கிரிக்கெட்டையும், சொந்த வேலைகளையும் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது :-(   )

5) ஒரு சாராரின் வாங்கும் சக்தி அதிகரித்தது. ( இவர்களைத்தான் நம் முதல்வர், ஒருமுறை விலைவாசி உயர்வு பற்றிய கேள்விக்கு, தி நகரிலும் நகைக் கடைகளிலும் இருக்கும் கூட்டத்தை உதாரணம் காட்டிப் பதில் கூறினார்). இவர்களைக் காரணம் காட்டி மற்றவர்களுக்கும் தரப்பட்ட விலைவாசி உயர்வு.  தேச வளர்ச்சியின் பயன் பரலாக இல்லாமல், ஒரு வீக்கம் போல ஒரு சாரார் மட்டும் வளர்ந்தது. மேலும் அவர்களை வளர்க்கவே அரசாங்கம் திட்டங்கள் தீட்டுவது.

6) மக்கள்த்தொகைப் பெருக்கத்துக்குத் தகுந்தாற்போல உற்பத்தியைப் பெருக்காதது. Demand - Supply -  Gap அதிகரித்தது. சொல்லப்போனால் இப்போது உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த நிலையில் உற்பத்தியாகும் உணவுப்பொருள்களை ஏற்றுமதிக்கு அனுமதித்தது.

7) ஊக வணிகத்தில் உணவுப்பொருள்களை மற்றும் அத்தியாவசியப் பொருள்களை அனுமதித்தது. நாளைய விலையை இன்றே அதிகரிக்கும் பேராசை வியாபாரிகளின் ஆசைக்கு ஊக்கம் கொடுத்தது. விவசாயிக்கு இதனால் எந்தப்பயனும் இல்லை :-(

என்னால் யோசிக்க முடிந்த காரணிகள் இவைதான். நண்பர்கள் மற்றும் இதைப் படிப்பவர்கள் வேறு ஏதாவது காரணிகள் பற்றிக் கூறினால் சேர்த்துக்கொள்ளலாம்.

என்ன செய்யலாம் :

1) எப்படி அரசாங்கத்தால் TASMAC சரக்குகளை RETAIL முறையில் விற்க முடியுமோ அப்பிடியே,  காய்கறி மற்றும் மளிகைப்  பொருள்களை விற்பனை  செய்ய கடைகளை அமைத்து நடத்தவேண்டும். விவசாயிகளிடம் நேரடியாக பொருள்களை வாங்கி இவற்றில் நேர்மையாக விற்பனை செய்யும் பொழுது இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று வெளி மார்க்கெட்டில் உள்ள பொருள்களின் விலை தாமாகக் குறையும். மற்றும் இதனால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் ஏதுவாக இருக்கும்.

2)  பதுக்கல்காரர்களை தயவு தாட்சணியம் இல்லாமல் தண்டிக்கவேண்டும். அதிகாரிகள் இவர்கள் மீது நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கத்தவறும் அதிகாரிகள் உடனே தண்டிக்கப்படவேண்டும்.

3) இப்படிப்பட்ட பேராசைக்கார நிறுவனங்கள் மற்றும் பதுக்கல்காரர்களுடன் சார்ந்த அரசியல்வாதிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுதும் குடும்பத்துடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

4)  உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகள் அமைந்த பகுதிகளில் இவர்களைக் கொண்டே விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யலாம். இது ஒரு சிறந்த மனப் பயிற்சியும் கூட.

5)  தரிசாகக் கிடக்கும் விவசாய நிலங்களை உடனடியாகக் கண்டறிந்து அங்கு விவசாயம் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஸ்பான்சர் செய்யவேண்டும்.

6) வேல்யூ செயின் எனப்படும் உற்பத்தி இடத்திலிருந்து இறுதி உபயோகிப்பாளர் வரை ஒரு பொருள் செல்லும் இடங்களை கணிணி மயமாக்கி, தேவை இல்லாத இடைத்தரகர்களை ஒழித்து, ஒவ்வொருவருக்குமான லாபவிகிதங்கள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் செய்வது முறைப்படுத்தப்படவேண்டும். இதற்கு இப்போது இருக்கக் கூடிய பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள், சந்தை வல்லுநர்கள் உதவி செய்யவேண்டும்.

7) ஊக வணிகத்தை மொத்தமாகத் தடை செய்யவேண்டும். இதற்குப் பதிலாக இருப்பு வணிகம் என புதிய முறையில் இருப்பு இருக்கும் விவசாயப்பொருள்களுக்கு ஒரு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். இதற்கும் இப்போது இருக்கக்கூடிய பொறியியல் மற்றும்  மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள், சந்தை வல்லுநர்கள் உதவி செய்யவேண்டும்.

8) தேசத்தின் வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான உள் கட்டுமானப் வசதிகள், தடையில்லா மின்சார வசதி உடனடியாக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

என்னால் யோசிக்க முடிந்த தீர்வுகள் இவைதான். நண்பர்கள் மற்றும் இதைப் படிப்பவர்கள் வேறு ஏதாவது தீர்வுகள் பற்றிக் கூறினால் சேர்த்துக்கொள்ளலாம்.


ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல  எழுதிவிட்டேன். இதெல்லாம் சரியா, எவ்வளவு தூரம் சாத்தியம்  ன்னுகூடத் தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது.  ஒரு சாமானியன்னான நானே இந்த அளவுக்கு யோசிக்கும் போது, ஒரு பெரிய அரசாங்கம் எவ்வளவு யோசிக்கணும், செய்யணும். ஏன் இப்பிடி இருக்காங்கன்னு புரியல. யாராவது (?) யாருக்காவது (?)  ஏதாவது (?) குடுத்து அமைதியா இருக்கச் சொல்லீட்டாங்களான்னும் தெரியல. அந்த சதுரகிரியாருக்குத்தான் வெளிச்சம்.

ஓம் நம சிவாய!!!! மஹாலிங்கமே போற்றி!!!! எங்களை எல்லாம் தயவு செஞ்சு இதுல எல்லாம் இருந்து காப்பாத்து.....

4 comments:

Anonymous said...

நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க

Sankar Gurusamy said...

Anonymous, Thanks for your visit and comments.. Keep supporting...

Anonymous said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

Sankar Gurusamy said...

திரு ஆர்.கே.சதீஷ்குமார், வருகைக்கும், கமெண்ட்க்கும் நன்றி...