Thursday, September 15, 2011

சாமானியனின் உடையும் முதுகெலும்பு..மீண்டும் பெட்ரோல்விலை உயர்வு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலை ரூ 3.14 உயர்த்தப்படுகிறது.. செய்தி சுட்டி கீழே :

Petrol prices to be up by Rs 3.14 per litre from midnight

 

இதனால் மீண்டும் விலைவாசி ஏறும்... ஏற்கனவே முதுகெலும்பு ஒடிந்த நிலையில் இருக்கும் நடுத்தர வர்க்க மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

அரசாங்கம் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால்   நகைப்பாகவே இருக்கிறது.. ஒன்று வட்டி வீதத்தை உயர்த்துகிறார்கள். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை உயர்த்துகிறார்கள்..

வரி வீதங்களை குறைத்து, அல்லது பரவலாக்கி, எளிமையாக்கி, பதுக்கல்களையும் கள்ள சந்தைகளையும் ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோல தெரியவில்லை.. இது ஒழிக்காமல் எந்த விலைவாசியும் குறையப்போவது இல்லை.

இதனாலான பாதிப்பு இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை.. ஏனெனில் பெரும்பாலோனோர் கோடீஸ்வர்கள் மீதமுள்ளோர்களில் விரல் விட்டு எண்ணுபவர்கள், இன்னும் சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தவிர அனைவரும் லட்சாதிபதிகள்..

எல்லாம் நம் தலைவிதி... இனிமேல் சாப்பாட்டுல சில கவளங்களை குறைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று பிரச்சாரம் கூட செய்வார்கள் போல தெரிகிறது...

கடவுளே மஹாலிங்கம், இந்த விலைவாசி உயர்விலிருந்து மக்களை காப்பாத்து...

சதுரகிரியாரே சரணம்... சிவ சம்போஹர ஹர மஹாதேவா...






 

7 comments:

shanmugavel said...

முதுகெலும்பு எங்கே இருக்கிறது? ஏற்கனவே உடைத்து விட்டார்கள்.மக்களை கசக்கி அதைவேடிக்கை பார்ப்பது அவர்களுக்கு பிழைப்பாய் போய் விட்டது,பகிர்வுக்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Unknown said...

இப்பவே பெட்ரோல் விலை அதிகம் இன்னும் அதிகமானால் என்ன செய்வது?சைக்கிள்,குதிரைகளில் தான் போக வேண்டும்

Unknown said...

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

Sankar Gurusamy said...

திரு. வைரை சதிஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ம.தி.சுதா said...

விலைவாசியை கட்டுப்படுத்துறத அது முடியாதே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

Sankar Gurusamy said...

திரு ம.தி.சுதா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...