Wednesday, September 28, 2011

புலனடக்கம்...

பல ஆன்மீக சாதனைகளுக்கு புலனடக்கம் முக்கியமானதாக பேசப்படுகிறது... அது ஏன்?

நமது கர்மாக்கள் நம் புலன்கள் மூலமே வெளிப்படுகின்றன அல்லது நிறைவேற்றப்படுகின்றன. கர்மாக்களை வெளியேற்ற / புதிதாக சேர்க்க இந்த ஐம்புலன்களும் ஒரு வாசலாக செயல்படுகின்றன..

ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சொல்லி இருக்கிறார்... இந்த ஆசைகள் நம் மனதில் இருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு புறக் காரணிகள் தேவை இருக்கிறது.. அந்த தூண்டுதல் இந்த ஐம்புலன்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.

இவ்வாறு தூண்டப்படும் ஆசைகள் நியாயமான முறையில் / அளவாக இருக்கும் போது / வெளிப்படும்போது கர்மாக்கள் குறையவும், அநியாயமான முறையில் / அபரிமிதமாக இருக்கும்போது / வெளிப்படும்போது புதிய கர்மாக்கள் சேரவும் செய்கின்றன...

இந்த புலன்களில் மிக சக்திவாய்ந்த புலன்கள் கண்களும், நாசியும். இவை பிற ஆசைகளைத் தூண்டுவதில் முதலிடம் வகிக்கின்றன. எனவே இவற்றை மிக கவனமாக உபயோகப்படுத்தவேண்டும். இதில் சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போதும் திறந்திருக்கும் புலன்கள் இரண்டு மூக்கு, செவி. எனவே நுகர்ச்சியும், கேட்டலும் முற்றிலும் நாம் இருக்கும் சூழல் சம்பந்தப்பட்டது.

எனவே நல்ல சூழல் அமைவது புலனடக்கத்துக்கு மிக அவசியம்.

புலனடக்கம் கைகூடினால் ஆன்மீக முன்னேற்றம் எளிதில் சித்திக்கும். அது நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோருக்கும் புலனடக்கம் கைகூடி ஆன்மீக முன்னேற்றம் சிறப்பா ஏற்பட்டு ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

1 comments:

shanmugavel said...

//புலனடக்கம் கைகூடினால் ஆன்மீக முன்னேற்றம் எளிதில் சித்திக்கும். அது நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச்செல்லும்.//
ஆமாம்.புலனடக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள் சரியானவையே! பகிர்வுக்கு நன்றி.