Monday, April 11, 2011

ஞானமும் இன்றைய அரசியலும் - ### !!!! ????

ஞானத்தைப் பற்றியும் அதை அடையும் வழியில் இருக்கும் தடங்கல்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது இன்றைய அரசியலுக்கும் ஞானத்துக்கும் சில அதிசயமான ஒப்பீடுகள் தோன்றியது. அது பற்றியதுதான் இந்தப் பதிவு :

மனிதனாகிய நாம், வாக்காளர்களாகவும், ஞானம் என்பது ஒரு நல்ல ஆட்சிக்கான அடையாளமாகவும்,  ஞானத்திற்கான நம் முயற்சி வாக்குகளாகவும், நாம் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி ஞானம் என்ற உயர்ந்த விஷயத்தை அடைவதற்குத் தடங்கல்களாக உள்ள சில அமானுஷ்ய சக்திகள்,  பணம், புகழ் போன்றவற்றை கொண்டு திருப்தி அடைந்து ஞானத்தை விட்டு நாம் விலகி விடுவது போலவே, நம் மக்களும் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கும், கையூட்டுகளுக்கும் ஏமாந்து தீயவர்களை அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுத்து நல்ல ஆட்சியை விட்டு விலகிவிடுகிறார்கள். இதனால் தீமையே விளையும். 

எப்படி ஞானம் அடைவது ஒரு மனிதனின் நடத்தையைப் பொருத்ததோ, அதுபோலவே ஒரு நல்ல ஆட்சி அமைவதும் நம்  வாக்காளர்களின் நல்ல நடத்தையைப் பொருத்ததே. அதாவது லஞ்சம், இலவசம் வாங்காமல், அதை நோக்காகக் கொள்ளாமல் வாக்களிக்க முற்பட்டால் நல்லாட்சி நிச்சயம்.

எப்படி ஒருவரின் விதிப்படியே ஞானம் கிடைக்கிறதோ அதுபோலவே, நம் விதிப்படியே நம் அரசாங்கம் அமைகிறது. உண்மையாக இருந்தால் உண்மையாகவும், போலியாக இருந்தால் போலியாகவும். 

இதில் இருக்கும் சூட்சுமம் மிகவும் சுவாராசியமானது.  நம் சமூகத்தின் பொது மனதில் இருக்கும் நல்ல தீய எண்ணங்களின் பாதிப்புதான் நம் வேட்பாளர்களிடம் பிரதிபலிக்கிறது. எனவே சமூகத்தில் நிகழும் நற்சிந்தனை பரவலைப் பொறுத்து நம் வேட்பாளர்களின் சிந்தனை அமைப்பு அமைகிறது. இதையே விதி என்று சொல்கிறோம்.


ஆனால் இந்த கலிகாலத்தில் தீமைகள் வளர்ந்து நன்மைகள் குறைவதைப் பார்க்கும்போது நல்லாட்சி என்பது வெறும் கனவு போலவே தோன்றுகிறது. ஆனாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நற்  சிந்தனைகளும், தனிமனித,  சமூக ஒழுக்கமும் வளர்ந்தால் நல்லாட்சி நிச்சயம் அமையும்.

எனவே நற்சிந்தனை வளர்ப்போம், இலவசங்களை புறந்தள்ளுவோம்,  லஞ்சத்தை மறுப்போம். நல்லாட்சி ஏற்பட உதவுவோம்.


சதுரகிரியாரே சரணம்!!!  சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

0 comments: